கரூரில் ₹850 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் எவர்வன் கோத்தாரி ஃபுட்வேர் ஆலையின் இரண்டாம் கட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார். அடிடாஸ் காலணிகள் தயாரிக்கப்படும் இந்த ஆலை மூலம் 6,750 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நிகழ்வில், அடிடாஸ் ஷூவில் ‘ப்ரியமுடன் விஜய்’ என அவர் கையெழுத்திட்டார்.
