இன்றைய தமிழகம்

“அடுத்த தேர்தலில் தவெக 65% வாக்குகளைப் பெறும்” – துரை வைகோ

திமுக கூட்டணியில் இருந்த பிரதான கட்சிகள் வெளியேறிய நிலையில் அடுத்து மதிமுகவும் கூட்டணியில் இருந்து வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதேசமயம் ஜூன் 27-ம் தேதி மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தங்களது முடிவை அறிவிப்பதாக மதிமுகவும் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் திருச்சியில் நேற்று (ஜூன்.26) செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக முதன்மை செயலரரும் எம். பி-யுமான துரை வைகோ முதல்வர் விஜய்யைப் பாராட்டி பேசியிருக்கிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஏற்கனவே மக்கள் தவெக மீதும் முதலமைச்சர் விஜய் மீதும் நம்பிக்கை வைத்துதான் வாக்களித்து இருக்கின்றனர். எனவே இதே நிலை தொடர்ந்தால் அடுத்த தேர்தலில் கண்டிப்பாக தவெக 65 % வாக்குகளைப் பெறும்.

Tired of Ads? Subscribe Now

முதலமைச்சர் விஜய் அவ்வளவாகப் பேசவில்லை என்றாலும் செயல்படும் முதலமைச்சராக இருக்கின்றார். அதுதான் மிக முக்கியமான விஷயம்.

என்னுடைய திருச்சி தொகுதிக்கு உட்பட்ட மெட்ரோ ரயில், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல கோரிக்கைகளோடு முதல்வரைச் சந்தித்தேன்.

அடுத்த நாளே அதிகாரிகள் என்னைக் கூப்பிடுகின்றனர். ஒரு செயல்படும் அரசைப் பார்க்கிறேன். ஒரு செயல்படும் அமைச்சரவையைப் பார்க்கிறேன்.

ஒரு செயல்படும் முதல்வரைப் பார்க்கிறேன். செயல்படும் முதல்வராக இருக்கும் விஜய்க்கு நன்றி” என்று பாராட்டி பேசியிருக்கிறார்.

திமுக கூட்டணியில் இருந்த பிரதான கட்சிகள் வெளியேறிய நிலையில் அடுத்து மதிமுகவும் கூட்டணியில் இருந்து வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதேசமயம் ஜூன் 27-ம் தேதி மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தங்களது முடிவை அறிவிப்பதாக மதிமுகவும் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் திருச்சியில் நேற்று (ஜூன்.26) செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக முதன்மை செயலரரும் எம். பி-யுமான துரை வைகோ முதல்வர் விஜய்யைப் பாராட்டி பேசியிருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஏற்கனவே மக்கள் தவெக மீதும் முதலமைச்சர் விஜய் மீதும் நம்பிக்கை […]

Recent News

கிண்டியில் அமைச்சர் தலைமையில் திறனாய்வுக் கூட்டம்

கிண்டியில் அமைச்சர் தலைமையில்…

சென்னை, கிண்டி, திரு.வி.க தொழிற்பேட்டையில் உள்ள…

நீர் எழில் பள்ளி திட்டம் -அமைச்சர் தொடங்கி வைத்தார்

நீர் எழில் பள்ளி…

சென்னை, எழும்பூர், மாகாண மகளிர் மேல்நிலைப்…

CJP போராட்டத்திற்கு திருமாவளவன் ஆதரவு

CJP போராட்டத்திற்கு திருமாவளவன்…

வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: நீட் தேர்வில்…

திருவண்ணாமலையில் நியாய விலை கடையில் கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலையில் நியாய விலை…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க்,…

ஆகஸ்ட் 2-ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்

ஆகஸ்ட் 2-ல் தேமுதிக…

தேமுதிக கழக பொதுச் செயலாளர் பிரேமலதா…

நீட் ஒழிப்பு தான் ஒரே தீர்வு-மு.க.ஸ்டாலின்

நீட் ஒழிப்பு தான்…

புடெல்லியில் நீட்டுக்கு எதிராக மாணவர்கள் போரடும்…

1 2 3 4 31