இன்றைய தமிழகம்

அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்கிறார்களா? புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் முதல் முறை யாக களம் கண்ட த.வெ.க. மகத்தான வெற்றியை பதிவு செய்தது. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ். கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழக முதல்அமைச்சராக விஜய் பதவியேற்று இருக்கிறார். முதல் அமைச்சர் விஜய் மற்றும் 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள். கடந்த 16ந் தேதி ஒதுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து 9 அமைச்சர்களும் தலைமைச்செயலகத்தில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு சென்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

விஜய் பொறுப்பேற்றது முதல் பல்வேறு சீரிய செயல்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். அதன்படி பள்ளிகள், வழிபாட்டுத் தளங்கள் அருகே இருக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பித்தார். அதன்படி படிப்படியாக மூடப்பட்டு வருகறிது. தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த 3 மாதங்களில் லஞ்சம் முழுமையாக ஒழிக்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதனை தொடர்ந்து முதல் அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் லஞ்ச ஒழிப்பு மற்றும் நிர்வாகத் தூய்மைக்கான அதிரடி நடவடிக்கைகள் அடிமட்ட அளவில் வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளன.

இந்தநிலையில், தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், எந்த அரசு துறையாக இருந்தாலும்
உங்களிடம் 1000 ரூபாய் லஞ்சம் கேட்டால்கூட ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம். புகார்
அளிப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் அளிக்க அழைக் 5 1800 425 1555 (24×7 கட்டணமில்லா எண்)
தமிழக அரசின் இந்த அதிரடி அறிவிப்பு சாமனிய மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த அதிரடி அறிவிப்பால் லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
முதல் அமைச்சர் விஜய் தானே ஒரு அரசு ஊழியரைப் போல உரிய நேரத்திற்கு அலுவலகம் வந்து பணியாற்றுவது அதிகாரிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத் தியுள்ளது. “மக்களின் பணத்தை நான் ஒரு பைசா கூட தொடமாட்டேன்” என்று உறுதியளித்துள்ள அவர், ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை வழங்க இலக்கு வைத்துள்ளார்.

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் முதல் முறை யாக களம் கண்ட த.வெ.க. மகத்தான வெற்றியை பதிவு செய்தது. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ். கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழக முதல்அமைச்சராக விஜய் பதவியேற்று இருக்கிறார். முதல் அமைச்சர் விஜய் மற்றும் 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள். கடந்த 16ந் தேதி ஒதுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து 9 அமைச்சர்களும் தலைமைச்செயலகத்தில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு சென்று பொறுப்பேற்றுக் கொண்டனர். விஜய் பொறுப்பேற்றது […]

Recent News

TNUSRB தேர்வுகள் ஒத்திவைப்பு:வயது தகுதி பாதிக்கப்படும் தேர்வர்களுக்கு ஓராண்டு வயது தளர்வு வழங்க வேண்டும்-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்

TNUSRB தேர்வுகள் ஒத்திவைப்பு:வயது…

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB)…

மாணவியர் விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தார்-அமைச்சர் செ.கமலி

மாணவியர் விடுதிக் கட்டடங்களை…

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்…

சர்க்கார் படப்பிடிப்பின் போதே தெரியும்-வரலட்சுமி சரத்குமார்

சர்க்கார் படப்பிடிப்பின் போதே…

தளபதி..!! இந்தப் பதிவைப் பற்றி என்ன…

இரண்டாவது அமைச்சரவை கூட்டம்

இரண்டாவது அமைச்சரவை கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில்…

தலைமை அலுவலகத்தில் லயோலா மணி  ஆய்வு

தலைமை அலுவலகத்தில் லயோலா…

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள்…

1 6 7 8 9 10 31