சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாகனத்தில் ஊர்வலமாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் கீர்த்தனா, “வரும் உள்ளாட்சித் தேர்தலில் தவெகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். அதன் பின்பு நீங்கள் கேட்கும் குடிநீர், சாலை உள்ளிட்ட அனைத்து அடிப்படை பிரச்சினைகளுக்கும் எங்களால் தீர்வு காண முடியும்” என்றார்.
