குற்றால சீசனில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய என்ன செய்ய வேண்டும்

  1. Home
  2. »
  3. Tamil Nadu
  4. »
  5. முதல்வர் அறிவித்த 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்

குற்றால சீசனில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய என்ன செய்ய வேண்டும்

அதிகாரிகளுடன் தென்காசி ஆட்சியர் ஆலோசனை

தென்காசி:
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குற்றால சீசன் துவங் குவதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் துவங்க உள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்கும் பொருட்டு அனைத்து பணிகளும் முடிவுற்று தயார் நிலை தயார் நிலையில் இருக்க வேண்டும். குற்றாலத்திற்கு வரும் பயணிகளுக்கு உடைமாற்றும் அறை, குடிநீர், கழிப்பறை, சாலை வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும். அருவிப்பகுதியில் குப்பைகள் தேங்காத வண்ணம் உடனுக்குடன் அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறு வணிக கடைகளிலிருந்து வரும் கழிவுகளை சிற்றாற்றில் கலக்காத வண்ணம் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அருவியை சுற்றியுள்ள பகுதிகளில் போதுமான மின்விளக்குகள் அமைத்திட வேண்டும்.

குற்றாலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை முற்றிலும் தடுக்க வேண்டும். வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து இலை போன்ற பொருட்களை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்த வேண்டும். உணவு பாதுகாப்புத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், காவல்துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகள் ஒருங் கிணைந்து வணிக நிறுவனங்களில் பிளாஸ் டிக் பொருட்கள் பயன் பாட்டினை அகற் றுவதற் கான நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கான வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், சாலைகள் அதற்குரிய வழித்தடங்களை சீரமைத்திட வேண்டும். அருவிப்பகுதி மற்றும் சுற்றுப்புறங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரா.சங்கர், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.புஷ்பராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காளிமுத்து, உதவி ஆணையர் (கலால்) ராமச்சந்திரன், தென்காசி வட்டாட்சியர் மணிகண்டன், குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ், மாவட்ட சுற்றுலா அலுவலர் ந.நித்திய கல்யாணி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதிகாரிகளுடன் தென்காசி ஆட்சியர் ஆலோசனை தென்காசி:தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குற்றால சீசன் துவங் குவதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் துவங்க உள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்கும் பொருட்டு அனைத்து பணிகளும் முடிவுற்று தயார் நிலை தயார் நிலையில் இருக்க வேண்டும். குற்றாலத்திற்கு வரும் பயணிகளுக்கு உடைமாற்றும் […]

Recent News

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு…

சென்னை:முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில்…

பண்ருட்டி அதிமுக வடக்கு ஒன்றிய அதிமுக ஆலோசனை கூட்டம்

பண்ருட்டி அதிமுக வடக்கு…

கடலூர்:கடலூர் மாவட்டம் பண் ருட்டியில், பண்ருட்டி…

100 சதவீத தேர்ச்சி பெற்ற ஸ்ரீ நாராயணகுரு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

100 சதவீத தேர்ச்சி…

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் கோவில் தெருவில்…

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும்…

அமைச்சர் நிர்மல் குமார் உறுதி சென்னை:“தமிழகத்தில்…

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர்…

மயிலாடுதுறை:முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி…

குற்றால சீசனில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய என்ன செய்ய வேண்டும்

குற்றால சீசனில் பயணிகள்…

அதிகாரிகளுடன் தென்காசி ஆட்சியர் ஆலோசனை தென்காசி:தென்காசி…

1 2 3 4 5 11