மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தகவல்

சேலம் மாவட்டத்தில் வருகிற 22.05.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சிணீர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளதாவது:
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள் ளிக்கிழமையில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் (Micro Lev-el Private Job Fair) நடத் தப்பட்டு வருகிறது. இதன்படி 22.05.2026, வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
சேலம், கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறிய அள விலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்களும், ஐடிஐ, டிப்ளமோ, பொறி யியல் மற்றும் செவிலியர் உள்ளிட்ட தொழிற்கல்வி பயின்றவர்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்ப முள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை நாடுநர்களும் www.tnpri-vatejobs.tn.gov.in <http://www.tnprivatejobs.
tn.gov.in> என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும், 04272401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
பணிக்காலியிடங்க ளுக்கு நபர்களைத் தேர்வு செய்யவுள்ள தொழில் நிறுவனங்களும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் அதிக எண்ணிக்கையில் இம்முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்கள்.