இன்றைய தமிழகம்

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

அமைச்சர் நிர்மல் குமார் உறுதி

சென்னை:
“தமிழகத்தில் மின்கட்ட ணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. தவறான தகவல் பரப் பப்பட்டு வருகிறது. மின் வாரியத்தில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது” என மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரி வித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறு ம்போது, “மின்துறையில் சீரமைக்க வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. சோலார் பேனல் கொள்முதல் விவகாரத்தில் விதிமுறை மீறல் நடந்துள்ளது. தவறு செய்தவர்கள் முன்னாள் அமைச்சர்களாக இருந்தா லும் நடவடிக்கை எடுக் கப்படும். மின்தடை குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டாலும் நடவடிக்கை மேற்கொள்ள பணிகள் நடந்து வருகிறது.

டிஎன்பிஎஸ்சி பணி நியமனத்தில் எந்த வித முறைகேடும் நடக்காது. மின்சாரத் துறை இரண் டரை லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஊழி யர்கள் பற்றாக்குறை யும் உள்ளது. இதற்கு முன்னர் இந்த யார் துறையை நிர்வகித்தார்கள் எனத் தெரியும். கடந்த ஓராண் டாக, மற்ற ஒப்பந்தப் பணிக ளுக்காக தோண்டப்படும் குழிகளில் 160 இடங்களில் பவர் கேபிள்கள் வெட்டப்பட்டுள்ளன.

முதலில் நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும். டெண்டர் எடுப்பதில் இனி எந்த மறைமுக டீலிங்கும் நடைபெறாது. மின்சார விநியோகத்தை சீராக செய்ய அறிவுறுத் தப்பட்டுள்ளது.
மக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தப்பட்டுள்ளது. தமிழ கத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.

அமைச்சர் நிர்மல் குமார் உறுதி சென்னை:“தமிழகத்தில் மின்கட்ட ணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. தவறான தகவல் பரப் பப்பட்டு வருகிறது. மின் வாரியத்தில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது” என மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரி வித்துள்ளார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறு ம்போது, “மின்துறையில் சீரமைக்க வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. சோலார் பேனல் கொள்முதல் விவகாரத்தில் விதிமுறை மீறல் நடந்துள்ளது. தவறு செய்தவர்கள் முன்னாள் அமைச்சர்களாக இருந்தா லும் நடவடிக்கை எடுக் கப்படும். மின்தடை […]

Recent News

மகளிர் உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் அறிவிப்பு; பெண்கள் மகிழ்ச்சி

மகளிர் உரிமைத்தொகை எப்போது?…

சென்னை: மகளிருக்கு ரூ.2500 உரிமைத்தொகை எப்…

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார் முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் இரங்கல்

நடிகர் அஜித்குமாரின் தாயார்…

சென்னை: நடிகர் அஜித் குமாரின் தாயார்…

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் அமைச்சர் திடீர் ரகசிய ஆய்வு

கோவை அரசு மருத்துவமனையில்…

கோவை அரசு மருத்துவ மனையில் நேற்று…

2வது நாளாக தங்கம் விலை உயர்வு

2வது நாளாக தங்கம்…

சென்னை: தங்கம், வெள்ளி விலை கடந்த…

நாளை மறுநாள் திருச்சி செல்கிறார் முதல் அமைச்சர் விஜய்

நாளை மறுநாள் திருச்சி…

சென்னை: திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச்…

அரசு ஊழியர்களுக்கு முக அங்கீகார வருகைப் பதிவேடு 1ம் தேதி முதல் அமல் தமிழக வரலாற்றில் முதன்முறையாக அதிரடி உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு முக…

சென்னை: தமிழக தலைமைச் செயலக வரலாற்றிலேயே…

1 2 3 15