இன்றைய தமிழகம்

தமிழக அமைச்சரவையில் வி.சி.க. சார்பில் வன்னியரசுக்கு அமைச்சர் பதவி

தமிழக அமைச்சர வையில் புதிதாக சேர்க் கப்பட்ட 23 பேருக்கு கவர்னர் அர்லேகர் நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சர்களுக்கு துறை கள் ஒதுக்கீடு செய்து கவர்னர் அர்லேகர் அதி காரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி முதல் அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச் சரவையில் இதுவரை இடம்பெற்றுள்ள 33 பேருக்கும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

தமிழக அமைச்ச ரவையில் சிறுபான்மையி னர் நலத்துறை மற் றும் ஆதிதிராவிடர் நலத்துறை ஆகியவை இதுவரை யாருக்கும் ஒதுக்கப்படாமல் இருந்து வருகிறது.

இதனிடையே தஞ்சை பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. ஷாஜகான் இன்று விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

ஐ.யு.எம்.எல். கட்சியின் பரிந்துரையை ஏற்று முதல் அமைச்சர் விஜய் கவர்னருக்கு அவரது பெயரை பரிந்துரை செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் தமிழக அமைச்சரவையில் விசிக இடம் பெறுவது குறித்து நேற்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறி வித்திருந்தார். மேலும் பெரும்பாலான நிர்வாகிகள் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர் என்றும், உயர்மட்ட நிர்வாகிகளிடம் ஆலோ சித்து அறிவிப்பு வெளி யிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் வி.சி.க. எம்.எல்.ஏ. வன்னி அரசு இன்று காலை முதல் அமைச்சர் விஜய் தலைமை யிலான அமைச்சரவையில் பதவியேற்பது உறுதியாகி உள்ளது. திருமாவளவன் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின் றன. தமிழக அமைச் சரவையில் இடம்பெற உள்ள ஐ.யு.எம்.எல். கட்சிக்கு சிறுபான்மை யினர் நலத்துறையும், வி.சி.க.வுக்கு ஆதி திராவிடர் நலத்துறையும் ஒதுக்கப்பட வாய்ப் புள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இன்று காலை 10 மணிக்கு பதவி யேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அமைச்சர வையில் புதிதாக சேர்க் கப்பட்ட 23 பேருக்கு கவர்னர் அர்லேகர் நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சர்களுக்கு துறை கள் ஒதுக்கீடு செய்து கவர்னர் அர்லேகர் அதி காரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி முதல் அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச் சரவையில் இதுவரை இடம்பெற்றுள்ள 33 பேருக்கும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தமிழக அமைச்ச ரவையில் சிறுபான்மையி னர் நலத்துறை மற் றும் ஆதிதிராவிடர் நலத்துறை ஆகியவை இதுவரை யாருக்கும் […]

Recent News

“சென்னையில் 108°F வெயில் சுட்டெரிக்கும்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

“சென்னையில் 108°F வெயில்…

சென்னை:தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று (மே.22)…

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள்…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி…

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு…

அனைத்துத்துறை அலுவலர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு…

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய…

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம்,…

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி கோலாகலம்

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி…

50,000க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிச்செடிகள் காட்சிப்படுத்தல்…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

10 ஆம் வகுப்பு…

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு…

1 22 23 24 25 26 31