
புதுக்கோட்டை:
ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை பலியாக்கும் வகையில் நடத்தப்படும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், தேசிய தேர்வு முகமையை (என்டிஏ) கலைக்க வலியுறுத்தியும் வாலிபர் சங்கம், இளைஞர் பெரும்மன்றம், மாணவர் சங்கம், மாணவர் பெருமன்றம் ஆகிய அமைப்புகளின் சார்பில் புதுக்கோட்டையில் செல்வாய்க்கிழமை ஆர்ப் பாட்டம் நடைபெற்றத.
புதுக்கோட்டை மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சா.ஜனார்த்தனன், அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தின் மாவட்டத் தலைவர் எம்.விஜய், அகில இந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.கார்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். வாலிபர் சங்க நகரச் செயலாளர் ஆர்.தீபக், இளைஞர் பெருமன்ற மாவட்ட துணைச் செயலாளர் கே.பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கைகளை விளக்கி வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.மகாதீர், இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் டி.மாரிமுத்து, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.வசந்த குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வாலிபர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.