இன்றைய தமிழகம்

மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூலிப்பது ஏன்? பட்டியல் போட்டு வெளியிட்ட ஊழியர்

தமிழகத்தில் கடந்த கால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளில் டாஸ்மாக் மதுக் கடைகளில், மது பாட்டிலில் குறிப்பிட்ட விலையைவிட கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அது புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு காலத்திலும் தொடர்வதாக மதுப்பிரி யர்கள் கவலை தெரிவித்து இருந்தனர். இந்த நிலை யில், மது பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூ லித்தால், டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது நடவ டிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கிடையே, நாங்கள் ஏன் மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூ லிக்கிறோம் என்று டாஸ் மாக் கடை ஊழியர் ஒருவர் பட்டியல் போட்டு வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

அந்த பட்டியலில், நாள் ஒன்றுக்கு ரூ.3 லட்சம் மது விற்பனை நடைபெறும் டாஸ்மாக் கடையின் செலவுகள் என் னென்ன என்பது குறிப் பிடப்பட்டுள்ளது. காலி பாட்டில்களை சேகரிக்க வருபவருக்கு ரூ.800, மது பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்ட வருப வருக்கு ரூ.800. காலி பாட்டில் ரூபாய் தாள் கமிஷன் 10 சதவீதப்படி, ரூ.2,500, மதுக்கூட வாடகை ஒப்பந்ததாரருக்கு ரூ.1,000, மதுபான பாட்டில் உடைந்து போவதற்கு ரூ.1000, மின் கட்டணம் (டாஸ்மாக் நிர்வாகம் வழங்குவதை தவிர்த்து) ரூ.200, அலுவலகம் சென்று வருவதற்கு ரூ.200, வங்கியில் பணம் கட்ட செல்லும் செலவு ரூ.200, இன்டர்நெட் வசதி பெற ரூ.200, சுகாதார செலவுக்கு ரூ.200, பாதுகாப்பு செலவு ரூ.500, மதுபானங்கள் இனாம் செலவு ரூ.500, தண்ணீர் கேன் செலவு ரூ.60 என மொத்தம் ரூ.8160 செலவு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஒரு மாதத்திற்கு கணக்கிடும்போது ரூ.2 லட்சத்து 44 ஆயிரத்து 800 செலவு ஏற்படுகிறது.

மாதா மாதம் கையூட்டு செலவு விவரமும் அடுத் ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், மாவட்ட மேலாளருக்கு ரூ.10 ஆயிரம். உதவி மேலாளருக்கு ரூ.2 ஆயிரம், அலுவலக பணியாளர்களுக்கு (எண்ணிக்கைக்கு ஏற்ப) ரூ.10 ஆயிரம், கலால் (வருவாய் ஆய்வாளர், துணை கமிஷனர்) ரூ.5
ஆயிரம், கலால் (உதவி கமிஷனர்) ரூ.5 ஆயிரம். கட்டிட உரிமையாளருக்கு வாடகை ரூ.60 ஆயிரம், மதுபானம் இறக்கு கூலி (பெட்டி ஒன்றுக்கு ரூ.5 வீதம்) ரூ.15 ஆயிரம், முதுநிலை மண்டல மேலா ளர் ரூ.5 ஆயிரம், அரசியல் நன்கொடை ரூ.5 ஆயிரம், காலி பாட்டில் ஒப்பந்ததாரர் ரூ.3 ஆயிரம், மீடியா ரூ.3 ஆயிரம், இதர செலவுகள் ரூ.10 ஆயிரம் என ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் செலவு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், நாள் ஒன் றுக்கு ரூ.3 லட்சத்திற்கு மது விற்பனையாகும் ஒரு டாஸ்மாக் கடையில், மாதச் செலவு ரூ.3 லட்சத்து 77 ஆயிரத்து 800 ஏற்படுவதாக தெரிகிறது. எனவே, தமிழக அரசு இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்பது டாஸ்மாக் கடை ஊழியர்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

தமிழகத்தில் கடந்த கால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளில் டாஸ்மாக் மதுக் கடைகளில், மது பாட்டிலில் குறிப்பிட்ட விலையைவிட கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அது புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு காலத்திலும் தொடர்வதாக மதுப்பிரி யர்கள் கவலை தெரிவித்து இருந்தனர். இந்த நிலை யில், மது பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூ லித்தால், டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது நடவ டிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கிடையே, நாங்கள் ஏன் மது பாட்டிலுக்கு […]

Recent News

மகளிர் உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் அறிவிப்பு; பெண்கள் மகிழ்ச்சி

மகளிர் உரிமைத்தொகை எப்போது?…

சென்னை: மகளிருக்கு ரூ.2500 உரிமைத்தொகை எப்…

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார் முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் இரங்கல்

நடிகர் அஜித்குமாரின் தாயார்…

சென்னை: நடிகர் அஜித் குமாரின் தாயார்…

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் அமைச்சர் திடீர் ரகசிய ஆய்வு

கோவை அரசு மருத்துவமனையில்…

கோவை அரசு மருத்துவ மனையில் நேற்று…

2வது நாளாக தங்கம் விலை உயர்வு

2வது நாளாக தங்கம்…

சென்னை: தங்கம், வெள்ளி விலை கடந்த…

நாளை மறுநாள் திருச்சி செல்கிறார் முதல் அமைச்சர் விஜய்

நாளை மறுநாள் திருச்சி…

சென்னை: திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச்…

அரசு ஊழியர்களுக்கு முக அங்கீகார வருகைப் பதிவேடு 1ம் தேதி முதல் அமல் தமிழக வரலாற்றில் முதன்முறையாக அதிரடி உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு முக…

சென்னை: தமிழக தலைமைச் செயலக வரலாற்றிலேயே…

1 2 3 15