
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட் ரிக் மேல்நிலைப்பள்ளி, 2026ஆம் ஆண்டு நடை பெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பான தேர்ச்சி பெற்று கல்வித் துறையில் சாதனை படைத்துள்ளது.
பள்ளியில் மாணவி ஆர்.எம்.காயத்ரிதேவி 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதலிடத் தையும், மாவட்ட அள விலும் முன்னிலை பெற் றுள்ளார். .. மாணவர் ஆர்.பாரதிராஜா மற்றும் மாணவி பி.தேசியா தலா 495 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவி எம்.புஷ்ப அஞ்சலி 493 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும் 490க்கு மேல் 11 மாணவர் கள், 480க்கு மேல் 24 மாணவர்கள், 470க்கு மேல் 42 மாணவர்கள், 460க்கு மேல் 61 மாணவர்கள் மற்றும் 450க்கு மேல் 76 மாணவர்கள் மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். கணிதப் பாடத்தில் 4 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 13 மாணவர்கள் சென்டம் எடுத்து சாதனை படைத்துள்ளனர். அதே போல் தமிழ் பாடத்தில் 9 மாணவர்கள், ஆங்கிலத்தில் 18 மாணவர்கள் மற்றும் சமூக அறிவிய லில் 8 மாணவர்கள் 99 மதிப் பெண்கள் பெற் றுள்ளனர். மாணவர்களின் இந்த சிறப்பான வெற்றிக்கு பள்ளி நிர்வாகம், ஆசி ரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தனர்.