
கடலூர் மாவட்ட மருந்தக நலசங்கம் சார்பில் காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சீனிவாச நாராயணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் இமயவர்மன் வரவேற்றார். செயலாளர் வெங்கடசுந்தரம் பங்கேற்று பேசுகையில், அகில இந்திய மருத்துவ வணிகர் சங்கம் சார்பில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் ஆன்லைன் மூலம் நடக்கும் மருந்து வர்த்தகத்தை எதிர்த்து நாளை 20 ஆம் தேதி ஒரு நாள் கடையடைப்பு செய்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்க உள்ளார்கள் என்று தெரிவித்தார். மாவட்டத்தில் அனைத்து மருந்து வணிகர்கள் நாளை கடை மூடவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி பேசினார். கடையடைப்பு அறிவிப்பு நோட்டீஸ் வெளி யிடப்பட்டது கூட்டத்தில் பொருளாளர் சுகுமார் பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.