
திமுகவில் இருந்து திருப்பூர் மத்திய மாவட்டச் செயலாளர் செல்வராஜ் அதிரடியாக விலகியுள்ளார். மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்குக் கட்சியின் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டதால் ஏற்பட்ட வருத்தம் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரி வித்துள்ளார். மேலும், தற்போதைக்கு வேறு எந்தக் கட்சியிலும் இணையும் எண்ணம் தமக்கு இல்லை என்றும் செல்வராஜ் தனது விளக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.