அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப் பாதை திட்டத்துக்கு ரயில்வே ஒப்புதல்

ரூ.993 கோடி மதிப்பிலான அரக்கோணம் செங்கல்பட்டு இடையி லான இரட்டைப் பாதை திட்டத்திற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித் துள்ளது. 68 கிலோ மீட்டர் நீளமுடைய அரக் கோணம் செங்கல்பட்டு வழித்தடமானது, சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் ஆகிய இடங்களை இணைக்கும் சென்னை புறநகர் ரயில்வேயின் முக்கிய வலையமைப்பாகும்.

சென்னை புறநகர் ரயில்வே வலையமைப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில், அரக் கோணம் செங்கல்பட்டு இரட்டைப் பாதை திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித் தார். தாமதமில்லாத ரயில்கள் இயக்கம் மற்றும் ரயில்களின் செயல்பாட்டுத் திறனை இந்த இரட்டைப் பாதை திட்டம் மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.

இந்த ரயில்வே வழித் தடம் தெற்கு ரயில்வேயால் இயக்கப்படுகிறது. தினசரி புறநகர் பயணிகள் ரயில் மட்டுமின்றி, நீண்ட தூர மற்றும் சரக்கு ரயில்களாலும் அதிகம் பயன்படுத்தப்படும் முக்கிய வழித்தடங்களில் இதுவும் ஒன்றாகும். இத்திட்டம் சரக்கு போக்குவரத்திற்கும் பெரிதும் பயனளிக்கும். இந்த வழித்தடம் சிமெண்ட், உணவு தானியங்கள், இரும்பு மற்றும் வாகனங்கள் போன்ற பொருட்களை, தொழில்துறை மற்றும் துறைமுகப் பகுதிகளுக்கு மிக விரைவாகக் கொண்டு செல்ல பயன்படும்.

இந்த ரயில் பாதை, மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் மற்றும் இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட பல முக்கியத் தொழில்துறை மண்டலங்கள் வழியாகச் செல்கிறது. எனவே, தொழில்துறை செயல்பாடுகளுக்கு இந்த இரட்டைப் பாதை திட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.993 கோடி மதிப்பிலான அரக்கோணம் செங்கல்பட்டு இடையி லான இரட்டைப் பாதை திட்டத்திற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித் துள்ளது. 68 கிலோ மீட்டர் நீளமுடைய அரக் கோணம் செங்கல்பட்டு வழித்தடமானது, சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் ஆகிய இடங்களை இணைக்கும் சென்னை புறநகர் ரயில்வேயின் முக்கிய வலையமைப்பாகும். சென்னை புறநகர் ரயில்வே வலையமைப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில், அரக் கோணம் செங்கல்பட்டு இரட்டைப் பாதை திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று மத்திய […]

Recent News

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூன் 13 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற…

மயிலாடுதுறை:உச்சநீதிமன்ற தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும்…

புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள்…

புதுக்கோட்டை:அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்து,…

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த தம்பதி கைது

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ…

பெர்லின்:உல க வல்லரசு நாடுகளுக்கு இடையே…

“சென்னையில் 108°F வெயில் சுட்டெரிக்கும்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

“சென்னையில் 108°F வெயில்…

சென்னை:தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று (மே.22)…

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள்…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி…

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு…

அனைத்துத்துறை அலுவலர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு…

1 2 3 4 5 6 11