இன்றைய தமிழகம்

இந்தியாவில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளின் விலை திடீர் உயர்வு.!!

 இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவன பொருட்களின் விலை 42% வரை உயர்ந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) கட்டமைப்புகளுக்கான தேவை அதிகரிப்பால் உலகளவில் மெமரி சிப் (RAM) மற்றும் ஸ்டோரேஜ் உதிரிபாகங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதனால் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தனது MacBook மற்றும் iPad உள்ளிட்ட தயாரிப்புகளின் விலைகளை 20% முதல் 42% வரை உயர்த்தியுள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்து இருக்கும் ஆப்பிள் நிறுவன உயரதிகாரிகள், AI தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகளவில் மெமரி சிப் விலையில் ஏற்பட்டுள்ள கடுமையான மற்றும் முன்னெப்போதும் இல்லாத உயர்வையே எங்கள் தயாரிப்புகளின் விலைகளை அதிகரிக்க காரணம்.

மேலும் இந்த விலை மாற்றங்கள் தற்போது அமல்படுத்தப்பட்டு ஆப்பிள் ஸ்டோர் மற்றும் ஆப்பிள் இந்தியா இணையதளத்தில் நடைமுறைக்கு வந்துவிட்டன என கூறி உள்ளனர். கடந்த சில மாதங்களாக ரேம் மற்றும் ஸ்டோரேஜ் சிப் உள்ளிட்ட உதிரிபாகங்களின் கூடுதல் விலையை ஆப்பிள் நிறுவனமே ஏற்றுக்கொண்டு நுகர்வோரை பாதுகாத்தது. குறைந்தபட்சம் இரண்டு காலாண்டுகளாக ஆப்பிள் தனது தயாரிப்புகளின் விலை உயர்வை நிறுத்தி வைத்திருந்தது. ஆனால் தொடர்ந்து கூடுதல் செலவினங்கள் தாங்க முடியாத அளவுக்கு சென்றதால், தற்போது விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகி இருக்கிறது.

 இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவன பொருட்களின் விலை 42% வரை உயர்ந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) கட்டமைப்புகளுக்கான தேவை அதிகரிப்பால் உலகளவில் மெமரி சிப் (RAM) மற்றும் ஸ்டோரேஜ் உதிரிபாகங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தனது MacBook மற்றும் iPad உள்ளிட்ட தயாரிப்புகளின் விலைகளை 20% முதல் 42% வரை உயர்த்தியுள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்து இருக்கும் ஆப்பிள் நிறுவன உயரதிகாரிகள், AI தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகளவில் மெமரி […]

Recent News

விண்ணப்பித்தவர்களுக்கு மிக விரைவில் ரேஷன் கார்டு

விண்ணப்பித்தவர்களுக்கு மிக விரைவில்…

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும்…

6 ஆண்டுகளில் பொது நலனுக்காக ரூ.1.60 கோடி வழங்கிய யாசகர்

6 ஆண்டுகளில் பொது…

துரை மாவட்ட ஆட்சியரிடம் யாசகரான பூல்பாண்டியன்…

பிரிக்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம்

பிரிக்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்கள்…

புதுடெல்லி:இந்தியாவின் தலைமையில் புது டெல்லியில் நடைபெற்ற…

திமுகவை தன்னிச்சையாக வலுப்படுத்தும் நேரம்: கனிமொழி

திமுகவை தன்னிச்சையாக வலுப்படுத்தும்…

தூத்துக்குடி:திமுகவை தன்னிச்சையாக வலுப்படுத்த வேண்டிய நேரம்…

தலைமை செயலக ஊழியர்கள் 10 மணிக்கு முன் பணிக்கு வர உத்தரவு

தலைமை செயலக ஊழியர்கள்…

சென்னை:முதலமைச்சர் விஜய் தினமும் காலை 10…

ஐ.ஐ.டி. சேர்க்கை விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம்

ஐ.ஐ.டி. சேர்க்கை விண்ணப்பங்கள்…

ஈரோடு, கோபிசெட்டிபாளையம் சென்னை:ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்…

1 12 13 14 15 16 18