இன்றைய தமிழகம்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் இருவர் கைதானது எப்படி?

ஐஜி ரம்யா பாரதி விளக்கம்

சென்னை:
கோவை 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக கோவை ஐஜி ரம்யா பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 21 ஆம் தேதி இரவு சுமார் 8.30 மணி அளவில், கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி வீட்டின் வெளியே விளையாடிக் கொண் டிருந்த 10 வயது சிறுமி மாலை சுமார் 5 மணி அளவில் காணாமல் போன தாக தகவல் கிடைக்கப் பெற்றது.
தகவல் கிடைத்தவுடன் காவல் துறையினர் உடன டியாக சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு, புகார் பெற்று அதே இரவு சுமார் 10 மணியளவில் குழந்தை காணாமல் போனது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது
காவல் கண்காணிப் பாளர் இதனைத் தொடர்ந்து கருமத்தம்பட்டி உட்கோட்ட துணைக் மேற்பார்வையில் ஐந்து தனிப்படைகள் அமைக் கப்பட்டு, காணாமல் போன சிறுமியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
விசாரணையின்போது சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், நாகப்பட்டினம் மாவட் டத்தை சேர்ந்த கார்த்தி (33), சிறுமியின் குடும்பத்துக்குப் பழக்கமான அண்டை வீட்டுக்காரர் என்பது தெரியவந்தது. அதோடு, சிறுமியை அழைத்துச் சென்றதும் உறுதி செய்யப் பட்டது.
இதனைத் தொடர்ந்து, கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள மரியா ரோஸ் கார்டன் அடுக்கு மாடி குடியிருப்பின் முதல் மாடியில் பதுங்கி இருந்த குற்றவாளியை காவல் துறையினர் சுற்றிவளைத்தனர். கார்த்தி அப்போது தப்பி க்க முயன்றபோது, மேல்மாடியில் இருந்து குதித்ததில், அவரது வலது கை மற்றும் வலது காலில் முறிவு ஏற்பட்டது. பின்னர் அவர் கைது செய் யப்பட்டார்.
விசாரணையில், குற்றவாளி கார்த்தி, சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கண்ணம் பாளையம் குளம் அருகிலுள்ள தென்னைத் தோட்டத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
மேலும், நடைபெற்ற விசாரணையில், பாரதிபுரம், பள்ளபாளையத்தை சேர்ந்த மோகன் (30) என்பவர், முக்கிய குற்றவாளிக்கு உறுதுணையாக இருந் தது தெரியவந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
கைது செய்யப்பட்ட கார்த்தி தற்போது கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச் சை பெற்று வருகிறார்.
இந்த வழக்கு சிறுமி மீதான பாலியல் வன் கொடுமை தொடர் புடையது என்பதால், வழக்கில் போக்சோ சட்டப் பிரிவுகள் சேர்க்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
24 நேரத்துக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு விரைவாக அரசின் நிவாரண உதவித் தொகை கிடைக் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன” என்று கோவை ஐஜி ரம்யா பாரதி தெரிவித்தார்.

ஐஜி ரம்யா பாரதி விளக்கம் சென்னை:கோவை 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக கோவை ஐஜி ரம்யா பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:கடந்த 21 ஆம் தேதி இரவு சுமார் 8.30 மணி அளவில், கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி வீட்டின் வெளியே விளையாடிக் கொண் டிருந்த 10 வயது சிறுமி மாலை சுமார் 5 மணி அளவில் காணாமல் போன தாக தகவல் […]

Recent News

தமிழ்நாடு அரசு புதிய முயற்சி

தமிழ்நாடு அரசு புதிய…

ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுய கணக்கெடுப்பு…

மேயர் பிரியா தலைமையில் ஆய்வு கூட்டம்

மேயர் பிரியா தலைமையில்…

பெருநகர சென்னை மாநகராட்சி வடகிழக்கு பருவமழையினை…

முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் வீரர் சாய் சுதர்ஷன்

முதலமைச்சர் விஜயை சந்தித்து…

நீண்ட காலம் என் நினைவில் நிலைத்திருக்கும்…

சகோதரத்துவம்,பிணைப்பு தொடர்கிறது-விஜய் குறித்து சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

சகோதரத்துவம்,பிணைப்பு தொடர்கிறது-விஜய் குறித்து…

இதயங்களை மகிழ்விப்பதில் இருந்து மாநிலத்தை வழிநடத்துவது…

லஞ்ச புகார்: தவெக நிர்வாகி கைது

லஞ்ச புகார்: தவெக…

லஞ்ச புகார்: தவெக நிர்வாகி கைது…

தள்ளிப்போன ‘Immortal’ பட வெளியீடு!

தள்ளிப்போன ‘Immortal’ பட…

முதல்வர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம்…

1 7 8 9 10 11 31