சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை பூஜா ஹெக்டே,
“சினிமா என்பது புதைமணல் போன்றது. கவனமாக இல்லாவிட்டால் அதில் சிக்கிக்கொண்டு சிதைந்து போய்விடலாம். அதனால் போட்டி இருந்தாலும் பொறாமை இல்லாமல் பயணிக்கவேண்டும்” என்று கூறினார்
மேலும், “சினிமாவில் உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால்தான் முன்னேற முடியும். இன்று சாதித்திருக்கும் அனைவரும் பல அவமானங்களையும் தோல்விகளையும் கடந்துதான் வந்திருக்கிறார்கள். இங்கே அவமானங்கள் இல்லாமல் வெற்றி கிடையாது” என்றும் அவர் தெரிவித்தார்
