இன்றைய தமிழகம்

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

அமைச்சர் நிர்மல் குமார் உறுதி

சென்னை:
“தமிழகத்தில் மின்கட்ட ணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. தவறான தகவல் பரப் பப்பட்டு வருகிறது. மின் வாரியத்தில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது” என மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரி வித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறு ம்போது, “மின்துறையில் சீரமைக்க வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. சோலார் பேனல் கொள்முதல் விவகாரத்தில் விதிமுறை மீறல் நடந்துள்ளது. தவறு செய்தவர்கள் முன்னாள் அமைச்சர்களாக இருந்தா லும் நடவடிக்கை எடுக் கப்படும். மின்தடை குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டாலும் நடவடிக்கை மேற்கொள்ள பணிகள் நடந்து வருகிறது.

டிஎன்பிஎஸ்சி பணி நியமனத்தில் எந்த வித முறைகேடும் நடக்காது. மின்சாரத் துறை இரண் டரை லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஊழி யர்கள் பற்றாக்குறை யும் உள்ளது. இதற்கு முன்னர் இந்த யார் துறையை நிர்வகித்தார்கள் எனத் தெரியும். கடந்த ஓராண் டாக, மற்ற ஒப்பந்தப் பணிக ளுக்காக தோண்டப்படும் குழிகளில் 160 இடங்களில் பவர் கேபிள்கள் வெட்டப்பட்டுள்ளன.

முதலில் நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும். டெண்டர் எடுப்பதில் இனி எந்த மறைமுக டீலிங்கும் நடைபெறாது. மின்சார விநியோகத்தை சீராக செய்ய அறிவுறுத் தப்பட்டுள்ளது.
மக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தப்பட்டுள்ளது. தமிழ கத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.

அமைச்சர் நிர்மல் குமார் உறுதி சென்னை:“தமிழகத்தில் மின்கட்ட ணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. தவறான தகவல் பரப் பப்பட்டு வருகிறது. மின் வாரியத்தில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது” என மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரி வித்துள்ளார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறு ம்போது, “மின்துறையில் சீரமைக்க வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. சோலார் பேனல் கொள்முதல் விவகாரத்தில் விதிமுறை மீறல் நடந்துள்ளது. தவறு செய்தவர்கள் முன்னாள் அமைச்சர்களாக இருந்தா லும் நடவடிக்கை எடுக் கப்படும். மின்தடை […]

Recent News

தலைவரானார் -லயோலா மணியை

தலைவரானார் -லயோலா மணியை

தமிழக பாடநூல் கழகத்தின் தலைவராக கல்வியாளர்…

விஜய்  மின்சார பேருந்திற்குள் ஆய்வு

விஜய் மின்சார பேருந்திற்குள்…

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் சென்னை,…

2031ல் ஒரு மற்றுமொரு ஆட்சி மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம்-அண்ணாமலை

2031ல் ஒரு மற்றுமொரு…

பொள்ளாச்சி: “2031ல் தமிழக மக்கள் முன்பு…

விஜயின் கல்விக் கரம்-கல்வி உதவி திட்டம்

விஜயின் கல்விக் கரம்-கல்வி…

தனது இரண்டு மாத சட்டமன்ற உறுப்பினர்…

விடுதி கட்டணம் உயர்வு-பழனியில்

விடுதி கட்டணம் உயர்வு-பழனியில்

பழனி கோயில் தங்கும் விடுதி அறைகளின்…

1 9 10 11 12 13 31