தவெக அமைச்சரவையில் இணையும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யார்?

சென்னை:
தேர்தலுக்கு பின்பு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு தவெக அமைச்சரவையில் 2 இடங்கள் வழங்கப்பட் டுள்ளது. தமிழகத்தில் நடை பெற்ற 17வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, புதிய முதல்அமைச்சராக ஜோசப் விஜய் கடந்த 10ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஏ.செங்கோட்டையன் உள்பட 9 பேர் அமைச் சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல் அமைச்சருமான ஜோசப் விஜய், விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சியின் முதல் மாநாட்டிலேயே, த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்போருக்கு ஆட்சியில் பங்கு தரப்படும் என்று அறிவித்து இருந்தார். அதன்படி, தேர்தலுக்கு பின்பு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் 2 இடங்கள் வழங்கப்பட உள்ளது. சட்டசபை தேர் தலில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த 5 எம்எல்ஏக்களில் இருவரை செய்வது குறித்து அமைச்சர்களாக தேர்வு தவெக தலைமை மற்றும் காங்கிரஸ் மேலிடம் இடையே ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அதில் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் குமாருக்கு முக்கியமான அமைச்சரவைப் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு அமைச்சர் பதவிக்காக மேலூர் தொகுதி எம்எல்ஏ விஸ்வநாதன் மற்றும் குளச்சல் தொகுதி எம்எல்ஏ தாரகை கத் பட் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்டது.

தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் மற்றும் மேலூர் எம்.எல்.ஏ. விஸ்வநாதன் ஆகியோர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 59 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை:தேர்தலுக்கு பின்பு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு தவெக அமைச்சரவையில் 2 இடங்கள் வழங்கப்பட் டுள்ளது. தமிழகத்தில் நடை பெற்ற 17வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, புதிய முதல்அமைச்சராக ஜோசப் விஜய் கடந்த 10ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஏ.செங்கோட்டையன் உள்பட 9 பேர் அமைச் சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல் அமைச்சருமான ஜோசப் விஜய், விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சியின் […]

Recent News

6 ஆண்டுகளில் பொது நலனுக்காக ரூ.1.60 கோடி வழங்கிய யாசகர்

6 ஆண்டுகளில் பொது…

துரை மாவட்ட ஆட்சியரிடம் யாசகரான பூல்பாண்டியன்…

பிரிக்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம்

பிரிக்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்கள்…

புதுடெல்லி:இந்தியாவின் தலைமையில் புது டெல்லியில் நடைபெற்ற…

திமுகவை தன்னிச்சையாக வலுப்படுத்தும் நேரம்: கனிமொழி

திமுகவை தன்னிச்சையாக வலுப்படுத்தும்…

தூத்துக்குடி:திமுகவை தன்னிச்சையாக வலுப்படுத்த வேண்டிய நேரம்…

தலைமை செயலக ஊழியர்கள் 10 மணிக்கு முன் பணிக்கு வர உத்தரவு

தலைமை செயலக ஊழியர்கள்…

சென்னை:முதலமைச்சர் விஜய் தினமும் காலை 10…

ஐ.ஐ.டி. சேர்க்கை விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம்

ஐ.ஐ.டி. சேர்க்கை விண்ணப்பங்கள்…

ஈரோடு, கோபிசெட்டிபாளையம் சென்னை:ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்…

வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில்22ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில்22ம்…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே 2026 மாதத்திற்கான…

1 5 6 7 8 9 11