இன்றைய தமிழகம்

நடைபாதை கடைகளில் பெண் வியாபாரிகளிடம் தவெக நிர்வாகி மாமூல் வசூல்

சேலம் புதிய பஸ் நிலைய நடைபாதையில் சிறிய அளவிலான கடை வைத்திருக்கும் பெண் வியாபாரிகளிடம் தவெக நிர்வாகி மாமூல் வசூலில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.தவெக அரசு பொறுப்பேற்றது முதல் லஞ்சம் இருக்காது.

யாருக்கும் கமிஷன் கொடுக்க தேவையில்லை என்றும், தூய்மையான ஆட்சி நடத்துவதாகவும் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான விஜய் மற்றும் அமைச்சர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில், சேலம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை கடைகளில் பூக்கடை, பழக்கடைகள் வைத்துள்ள பெண்களிடம் கட்சி நிர்வாகி மாமூல் வசூலிக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட வெளி ஊர்களுக்கு, வெளி மாநிலத்துக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதையில் சிறிய அளவிலான கடைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த கடைகளில் தவெகவை சேர்ந்த 45வது கோட்ட துணை ெசயலாளரான முரளி என்பவர், 8மணி நேரத்திற்கு ரூ.150, நாள் ஒன்றுக்கு ரூ.450 என்று மாமூல் தர வேண்டும் என்று கூறி, பெண் வியாபாரிகளிடம் வசூல் செய்து வருவதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மாநகராட்சியில் எந்த டெண்டரும் எடுக்காத நிலையில், எந்தவித அனுமதியும் இல்லாமல் இதுபோன்று நடைபாதையில் உள்ள சிறிய வியாபாரிகளிடம் மாமூலாக பணம் வசூல் செய்யும் தவெக நிர்வாகி மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சேலம் புதிய பஸ் நிலைய நடைபாதையில் சிறிய அளவிலான கடை வைத்திருக்கும் பெண் வியாபாரிகளிடம் தவெக நிர்வாகி மாமூல் வசூலில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.தவெக அரசு பொறுப்பேற்றது முதல் லஞ்சம் இருக்காது. யாருக்கும் கமிஷன் கொடுக்க தேவையில்லை என்றும், தூய்மையான ஆட்சி நடத்துவதாகவும் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான விஜய் மற்றும் அமைச்சர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில், சேலம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை கடைகளில் பூக்கடை, பழக்கடைகள் வைத்துள்ள பெண்களிடம் கட்சி நிர்வாகி […]

Recent News

கன்னியாகுமரியில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

கன்னியாகுமரியில் சிறந்த மதிப்பெண்…

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில்…

கடலூர்: ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து நாளை மருந்து கடைகள் மூடல்

கடலூர்: ஆன்லைன் வர்த்தகத்தை…

கடலூர் மாவட்ட மருந்தக நலசங்கம் சார்பில்…

தவெக அமைச்சரவையில் இணையும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யார்?

தவெக அமைச்சரவையில் இணையும்…

சென்னை:தேர்தலுக்கு பின்பு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ்…

வாகன ஓட்டியிடம் லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

வாகன ஓட்டியிடம் லஞ்சம்…

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் நல் லூர் காவல்…

தமிழக அமைச்சரவை நாளை மறுநாள் விரிவாக்கம்

தமிழக அமைச்சரவை நாளை…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு…

கோயில்களின் தங்கத்தை பணமாக்க திட்டமா?

கோயில்களின் தங்கத்தை பணமாக்க…

மத்திய நிதியஅமைச்சகம் மறுப்பு புதுடெல்லி:நாடு முழுவதும்…

1 13 14 15 16