இன்றைய தமிழகம்

நடைபாதை கடைகளில் பெண் வியாபாரிகளிடம் தவெக நிர்வாகி மாமூல் வசூல்

சேலம் புதிய பஸ் நிலைய நடைபாதையில் சிறிய அளவிலான கடை வைத்திருக்கும் பெண் வியாபாரிகளிடம் தவெக நிர்வாகி மாமூல் வசூலில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.தவெக அரசு பொறுப்பேற்றது முதல் லஞ்சம் இருக்காது.

யாருக்கும் கமிஷன் கொடுக்க தேவையில்லை என்றும், தூய்மையான ஆட்சி நடத்துவதாகவும் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான விஜய் மற்றும் அமைச்சர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில், சேலம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை கடைகளில் பூக்கடை, பழக்கடைகள் வைத்துள்ள பெண்களிடம் கட்சி நிர்வாகி மாமூல் வசூலிக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட வெளி ஊர்களுக்கு, வெளி மாநிலத்துக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதையில் சிறிய அளவிலான கடைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த கடைகளில் தவெகவை சேர்ந்த 45வது கோட்ட துணை ெசயலாளரான முரளி என்பவர், 8மணி நேரத்திற்கு ரூ.150, நாள் ஒன்றுக்கு ரூ.450 என்று மாமூல் தர வேண்டும் என்று கூறி, பெண் வியாபாரிகளிடம் வசூல் செய்து வருவதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மாநகராட்சியில் எந்த டெண்டரும் எடுக்காத நிலையில், எந்தவித அனுமதியும் இல்லாமல் இதுபோன்று நடைபாதையில் உள்ள சிறிய வியாபாரிகளிடம் மாமூலாக பணம் வசூல் செய்யும் தவெக நிர்வாகி மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சேலம் புதிய பஸ் நிலைய நடைபாதையில் சிறிய அளவிலான கடை வைத்திருக்கும் பெண் வியாபாரிகளிடம் தவெக நிர்வாகி மாமூல் வசூலில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.தவெக அரசு பொறுப்பேற்றது முதல் லஞ்சம் இருக்காது. யாருக்கும் கமிஷன் கொடுக்க தேவையில்லை என்றும், தூய்மையான ஆட்சி நடத்துவதாகவும் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான விஜய் மற்றும் அமைச்சர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில், சேலம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை கடைகளில் பூக்கடை, பழக்கடைகள் வைத்துள்ள பெண்களிடம் கட்சி நிர்வாகி […]

Recent News

நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி வாலிபர்கள், மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்துசெய்யக்…

புதுக்கோட்டை:ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை…

போக்குவரத்து துறையில் மோசடி புகார் வழக்கு:செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம்

போக்குவரத்து துறையில் மோசடி…

சென்னை:போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக்…

தஞ்சையில் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சையில் 22ம் தேதி…

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த லாரி உரிமையாளர்கள் நல சங்கம் கோரிக்கை

மணல் குவாரிகளை அரசே…

வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல்…

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப் பாதை திட்டத்துக்கு ரயில்வே ஒப்புதல்

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப்…

ரூ.993 கோடி மதிப்பிலான அரக்கோணம் செங்கல்பட்டு…

ஏலகிரி மலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஏலகிரி மலையில் அரசுப்…

ஜோலார்பேட்டை:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி…

1 12 13 14 15 16