இன்றைய தமிழகம்

நடைபாதை கடைகளில் பெண் வியாபாரிகளிடம் தவெக நிர்வாகி மாமூல் வசூல்

சேலம் புதிய பஸ் நிலைய நடைபாதையில் சிறிய அளவிலான கடை வைத்திருக்கும் பெண் வியாபாரிகளிடம் தவெக நிர்வாகி மாமூல் வசூலில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.தவெக அரசு பொறுப்பேற்றது முதல் லஞ்சம் இருக்காது.

யாருக்கும் கமிஷன் கொடுக்க தேவையில்லை என்றும், தூய்மையான ஆட்சி நடத்துவதாகவும் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான விஜய் மற்றும் அமைச்சர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில், சேலம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை கடைகளில் பூக்கடை, பழக்கடைகள் வைத்துள்ள பெண்களிடம் கட்சி நிர்வாகி மாமூல் வசூலிக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட வெளி ஊர்களுக்கு, வெளி மாநிலத்துக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதையில் சிறிய அளவிலான கடைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த கடைகளில் தவெகவை சேர்ந்த 45வது கோட்ட துணை ெசயலாளரான முரளி என்பவர், 8மணி நேரத்திற்கு ரூ.150, நாள் ஒன்றுக்கு ரூ.450 என்று மாமூல் தர வேண்டும் என்று கூறி, பெண் வியாபாரிகளிடம் வசூல் செய்து வருவதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மாநகராட்சியில் எந்த டெண்டரும் எடுக்காத நிலையில், எந்தவித அனுமதியும் இல்லாமல் இதுபோன்று நடைபாதையில் உள்ள சிறிய வியாபாரிகளிடம் மாமூலாக பணம் வசூல் செய்யும் தவெக நிர்வாகி மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சேலம் புதிய பஸ் நிலைய நடைபாதையில் சிறிய அளவிலான கடை வைத்திருக்கும் பெண் வியாபாரிகளிடம் தவெக நிர்வாகி மாமூல் வசூலில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.தவெக அரசு பொறுப்பேற்றது முதல் லஞ்சம் இருக்காது. யாருக்கும் கமிஷன் கொடுக்க தேவையில்லை என்றும், தூய்மையான ஆட்சி நடத்துவதாகவும் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான விஜய் மற்றும் அமைச்சர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில், சேலம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை கடைகளில் பூக்கடை, பழக்கடைகள் வைத்துள்ள பெண்களிடம் கட்சி நிர்வாகி […]

Recent News

தொழிலாளர்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் – காரைக்குடியில் நடைபெறுகிறது

தொழிலாளர்களுக்கான சிறப்பு தொழில்…

சிவகங்கை: புதிய தொழில் முனைவோர் மற்றும்…

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து |திருப்பதி பிரசாதம் வழங்கிய குப்புசாமி

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து…

திருத்தணி: அதிமுக படு தோல்வியை சந்தித்த…

தொழில்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ ஆக்கப்பூர்வமான பணிகள் அமைச்சர் பெ. மதன்ராஜா தகவல்

தொழில்துறையில் தமிழகம் முன்னோடி…

நெல்லை: திருநெல்வெலி மாவட்ட தொழில் மையம்…

மகன் கண் முன்னே தந்தை கொலை: குற்றவாளியை உடனே கைது செய்ய ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

மகன் கண் முன்னே…

திருவாரூர்: தமிழ் மாநில காங்கி ரஸ்(மூ)…

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருத்தணியில் தவெகவினர் அன்னதானம்

உலக பட்டினி தினத்தை…

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் அனைவருக்கும் அன்னம்…

அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட துணைச்செயலாளர் சிவராஜ் தவெகாவில் இணைந்தார்

அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில்…

காஞ்சிபுரம்: சென்னை தலைமை செயலகத்தில் தமிழக…

1 2 3 4 5 6 16