இன்றைய தமிழகம்

நடைபாதை கடைகளில் பெண் வியாபாரிகளிடம் தவெக நிர்வாகி மாமூல் வசூல்

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. தமிழக அமைச்சரவை விரிவாக்கம்:புதிய அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு

நடைபாதை கடைகளில் பெண் வியாபாரிகளிடம் தவெக நிர்வாகி மாமூல் வசூல்

சேலம் புதிய பஸ் நிலைய நடைபாதையில் சிறிய அளவிலான கடை வைத்திருக்கும் பெண் வியாபாரிகளிடம் தவெக நிர்வாகி மாமூல் வசூலில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.தவெக அரசு பொறுப்பேற்றது முதல் லஞ்சம் இருக்காது.

யாருக்கும் கமிஷன் கொடுக்க தேவையில்லை என்றும், தூய்மையான ஆட்சி நடத்துவதாகவும் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான விஜய் மற்றும் அமைச்சர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில், சேலம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை கடைகளில் பூக்கடை, பழக்கடைகள் வைத்துள்ள பெண்களிடம் கட்சி நிர்வாகி மாமூல் வசூலிக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட வெளி ஊர்களுக்கு, வெளி மாநிலத்துக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதையில் சிறிய அளவிலான கடைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த கடைகளில் தவெகவை சேர்ந்த 45வது கோட்ட துணை ெசயலாளரான முரளி என்பவர், 8மணி நேரத்திற்கு ரூ.150, நாள் ஒன்றுக்கு ரூ.450 என்று மாமூல் தர வேண்டும் என்று கூறி, பெண் வியாபாரிகளிடம் வசூல் செய்து வருவதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மாநகராட்சியில் எந்த டெண்டரும் எடுக்காத நிலையில், எந்தவித அனுமதியும் இல்லாமல் இதுபோன்று நடைபாதையில் உள்ள சிறிய வியாபாரிகளிடம் மாமூலாக பணம் வசூல் செய்யும் தவெக நிர்வாகி மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சேலம் புதிய பஸ் நிலைய நடைபாதையில் சிறிய அளவிலான கடை வைத்திருக்கும் பெண் வியாபாரிகளிடம் தவெக நிர்வாகி மாமூல் வசூலில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.தவெக அரசு பொறுப்பேற்றது முதல் லஞ்சம் இருக்காது. யாருக்கும் கமிஷன் கொடுக்க தேவையில்லை என்றும், தூய்மையான ஆட்சி நடத்துவதாகவும் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான விஜய் மற்றும் அமைச்சர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில், சேலம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை கடைகளில் பூக்கடை, பழக்கடைகள் வைத்துள்ள பெண்களிடம் கட்சி நிர்வாகி […]

Recent News

மேகதாது அணை குறித்து விவாதிக்க திமுக நோட்டீஸ்

மேகதாது அணை குறித்து…

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின்…

ராஜ்மோகன் முதல்வருக்கு பரிசளித்தார்

ராஜ்மோகன் முதல்வருக்கு பரிசளித்தார்

அமைச்சர் ராஜ்மோகன், முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு…

ஒரு நாடே பொய்களால் கட்டமைக்கப்படுகிறது-இயக்குநர் வினோத்

ஒரு நாடே பொய்களால்…

இன்றைய சமூகத்தில் பொய்கள் தவிர்க்க முடியாததாக…

விஜய் ஆய்வு

விஜய் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள்…

அமைச்சர்கள் ஆய்வு கூட்டம் -முதல்வர் தலைமையில்

அமைச்சர்கள் ஆய்வு கூட்டம்…

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள்…

தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்தின் மேலாண்மை இயக்குநர் -அமைச்சருடன் சந்திப்பு

தேசிய கூட்டுறவு வளர்ச்சி…

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை…

1 2 3 4 5 6 31