நாளை மறுநாள் திருச்சி செல்கிறார் முதல் அமைச்சர் விஜய்

சென்னை: திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்க வரும் திங்கள்கிழமை முதல் அமைச்சர் விஜய் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சி யாக வென்று கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல் அமைச்சர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகு திகளிலும் வெற்றி பெற்ற விஜய், பெரம்பூரைத் தக்கவைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதி யில் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க முதல் அமைச்சர் விஜய், வரும் திங்கள்கிழமை அங்கு செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக் – கின்றன. சென்னையில் இருந்து தனி விமானத்தில் – திருச்சி கிழக்கு தொகுதி செல்லும் விஜய், அங்குள்ள கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி கிழக்கு தொகு தியில் விஜய் 91,381 வாக்குகள் பெற்று 24,416 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார். இந்த தொகுதியில் விஜய்யை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் 63,965 வாக்குகள் பெற்று இருந்தார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜசேகரன் 19,715 வாக்குகள் மட்டுமே பெற்றார். திருச்சி கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலை யில், விஜய் அங்கு செல் வது முக்கியத்துவம் பெற் றுள்ளது. அண்மையில் அதி முக எம்.எல்.ஏக்கள் 4 பேர் தங்கள் பதவியை ராஜினமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். திருச்சி கிழக்குடன் சேர்த்து பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம், அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளையும் சேர்த்து 5 இடங்களுக்கு விரை வில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.

சென்னை: திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்க வரும் திங்கள்கிழமை முதல் அமைச்சர் விஜய் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சி யாக வென்று கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல் அமைச்சர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகு திகளிலும் வெற்றி பெற்ற விஜய், பெரம்பூரைத் தக்கவைத்துக்கொண்டு […]

Recent News

தலைமை செயலக ஊழியர்கள் 10 மணிக்கு முன் பணிக்கு வர உத்தரவு

தலைமை செயலக ஊழியர்கள்…

சென்னை:முதலமைச்சர் விஜய் தினமும் காலை 10…

ஐ.ஐ.டி. சேர்க்கை விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம்

ஐ.ஐ.டி. சேர்க்கை விண்ணப்பங்கள்…

ஈரோடு, கோபிசெட்டிபாளையம் சென்னை:ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்…

வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில்22ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில்22ம்…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே 2026 மாதத்திற்கான…

நெல்லையில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட விவிபேட் இயந்திர தெர்மல் பேப்பர் ரோல் அகற்றும் பணி

நெல்லையில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட…

மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.ரா.சுகுமார் ஆய்வு திருநெல்வேலி…

சேலம் மாவட்டத்தில் 22ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் 22ம்…

மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தகவல் சேலம்…

தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு…

பங்கேற்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு தேனி:தனியார்துறை…

1 9 10 11 12 13 15