நாளை மறுநாள் திருச்சி செல்கிறார் முதல் அமைச்சர் விஜய்

சென்னை: திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்க வரும் திங்கள்கிழமை முதல் அமைச்சர் விஜய் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சி யாக வென்று கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல் அமைச்சர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகு திகளிலும் வெற்றி பெற்ற விஜய், பெரம்பூரைத் தக்கவைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதி யில் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க முதல் அமைச்சர் விஜய், வரும் திங்கள்கிழமை அங்கு செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக் – கின்றன. சென்னையில் இருந்து தனி விமானத்தில் – திருச்சி கிழக்கு தொகுதி செல்லும் விஜய், அங்குள்ள கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி கிழக்கு தொகு தியில் விஜய் 91,381 வாக்குகள் பெற்று 24,416 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார். இந்த தொகுதியில் விஜய்யை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் 63,965 வாக்குகள் பெற்று இருந்தார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜசேகரன் 19,715 வாக்குகள் மட்டுமே பெற்றார். திருச்சி கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலை யில், விஜய் அங்கு செல் வது முக்கியத்துவம் பெற் றுள்ளது. அண்மையில் அதி முக எம்.எல்.ஏக்கள் 4 பேர் தங்கள் பதவியை ராஜினமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். திருச்சி கிழக்குடன் சேர்த்து பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம், அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளையும் சேர்த்து 5 இடங்களுக்கு விரை வில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.

சென்னை: திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்க வரும் திங்கள்கிழமை முதல் அமைச்சர் விஜய் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சி யாக வென்று கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல் அமைச்சர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகு திகளிலும் வெற்றி பெற்ற விஜய், பெரம்பூரைத் தக்கவைத்துக்கொண்டு […]

Recent News

கன்னியாகுமரியில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

கன்னியாகுமரியில் சிறந்த மதிப்பெண்…

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில்…

கடலூர்: ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து நாளை மருந்து கடைகள் மூடல்

கடலூர்: ஆன்லைன் வர்த்தகத்தை…

கடலூர் மாவட்ட மருந்தக நலசங்கம் சார்பில்…

தவெக அமைச்சரவையில் இணையும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யார்?

தவெக அமைச்சரவையில் இணையும்…

சென்னை:தேர்தலுக்கு பின்பு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ்…

வாகன ஓட்டியிடம் லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

வாகன ஓட்டியிடம் லஞ்சம்…

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் நல் லூர் காவல்…

தமிழக அமைச்சரவை நாளை மறுநாள் விரிவாக்கம்

தமிழக அமைச்சரவை நாளை…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு…

கோயில்களின் தங்கத்தை பணமாக்க திட்டமா?

கோயில்களின் தங்கத்தை பணமாக்க…

மத்திய நிதியஅமைச்சகம் மறுப்பு புதுடெல்லி:நாடு முழுவதும்…

1 12 13 14 15