
நீலகிரி:
நீலகிரி மாவட்ட ஆட் சியர் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு பூச் செண்டு கொடுத்து மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் பொன்னாடை போர்த்தி உடன் நீலகிரி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் மரியாதை நிமித்தமாக கொடுத்து சந்தித்தனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து உதகை மார்க்கெட் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 1 அடித்தளம் உடனடியாக முடிக்கப்பட்டு ஏற்கனவே கடைகளை நடத்திவந்தவர்களிடம் ஒப்படைக்குமாறும் நீலகிரி மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர் விநியோகம் குளறுபடிகள் குறித்தும் மாவட்டத்தில் வனவிலங்கு நடமாட்டம் மனிதர்கள் புலங்கும் இடத்தில் அதிகமாக உள்ளதால் அதை சரி செய்யவும், மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் அனைத்து மக்களுக்கும் தங்குதடை யின்றி கிடைக்கவும், நகரில் மக்கள் புலங்கும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றவும், குன்னூர் மார்க்கெட் உடனடியாக புனரமைப்பு செய்து உரிய வியாபாரிகளிடம் ஒப்படைக்கவும், மேலும் மாவட்ட வருவாய் அலுவலரிடம் முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத் தொகை விதவை உதவித்தொகை தமிழக முதல்வர் அறிவித்த அனைத்து திட்டங்களையும் உடனடியாக மக்க ளிடம் சேருமாறு அறிவு றுத்தப் பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகளை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மாவட்ட பொறுப் பாளர் ரமேஷ், மாவட்ட கழக செயலாளர். பாமா ரமேஷ், மாவட்ட கழக இணை செயலாளர் கணேஷ், மாவட்ட கழக பொருளாளர் ராஜேஷ், மாவட்ட கழக துணை செய லாளர்கள் ஆனந்த் பஷீர்கான் மற்றும் மாவட்ட கழக செயற்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.