பேசும் மருத்துவம் | பாரம்பரிய மருத்துவம்

ஏப்பம்

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை அளவு எடுத்து, இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் நிவாரணம் கிடைக்கும்.

பூச்சிக்கடிவலி

எறும்பு உள்ளிட்ட பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்க்கலாம்.

உடல் மெலிய

கொழு கொழுவென குண்டாக இருப்பவர்கள் உடல் இறுகி மெலிய கொள்ளுப் பயறு (Horse Gram) உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

வயிற்றுப்புண்

பீட்ரூட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேன் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குறையும்.

வயிற்றுப்போக்கு

கறிவேப்பிலையுடன் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து மைபோல் அரைத்து உட்கொண்டு தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.

வேனல் கட்டி

வேனல் கட்டியால் வலி அதிகமாக இருந்தால், சிறிதளவு சுண்ணாம்புடன் தேன் அல்லது வெல்லம் கலந்து கட்டியின் மீது தடவி, அதன் மேல் ஒரு வெற்றிலையை ஒட்டி வைத்தால் நிவாரணம் கிடைக்கும்.

வேர்க்குரு

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்க்குரு குறையலாம்.

உடல் தளர்ச்சி

முட்டைக்கோசுடன் பசுவின் வெண்ணெய் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் தளர்ச்சி குறையும்.

நீர்ச்சுருக்கு / நீர்க்கடுப்பு

வெயில் காலத்தில் அதிக தண்ணீர் குடிக்காததால் நீர்ச்சுருக்கு ஏற்படலாம்.

தீர்வு:

  • தாராளமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • ஒரு கைப்பிடி பார்லி அரிசியை 8 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின் குடிக்கலாம்.
  • இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

தாய்ப்பால் சுரக்க

அரிசியுடன் வெந்தயத்தை சேர்த்து கஞ்சியாக காய்ச்சி சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரக்க உதவும்.

எரிச்சல் கொப்பளம்

நெருப்பு அல்லது சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்து பூசினால் எரிச்சல் குறைந்து கொப்பளம் ஏற்படாமல் இருக்கலாம்.

பித்த நோய்கள்

கேரட் சாறுடன் சிறிது தேன் கலந்து பருகி வந்தால்:

  • கர்ப்பிணிப் பெண்களின் வாந்தி குறைய உதவும்.
  • உடலுக்கு வலு தரும்.
  • பித்தக் கோளாறுகள் குறைய உதவும்.

கபக்கட்டு

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் இருமல் மற்றும் கபக்கட்டு குறையலாம்.

நெற்றிப்புண்

நெற்றியில் குங்குமம் வைத்ததால் ஏற்பட்ட புண்ணுக்கு, வில்வ மரக் கட்டையுடன் சந்தனம் சேர்த்து அரைத்து தடவி வந்தால் புண் ஆற உதவும்.

குறிப்பு: இவை பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்ட வீட்டு வைத்திய முறைகள். கடுமையான அல்லது நீடித்த உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

ஏப்பம் அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை அளவு எடுத்து, இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் நிவாரணம் கிடைக்கும். பூச்சிக்கடிவலி எறும்பு உள்ளிட்ட பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்க்கலாம். உடல் மெலிய கொழு கொழுவென குண்டாக இருப்பவர்கள் உடல் இறுகி மெலிய கொள்ளுப் பயறு (Horse Gram) உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வயிற்றுப்புண் பீட்ரூட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேன் கலந்து அருந்தி […]

Recent News

நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி வாலிபர்கள், மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்துசெய்யக்…

புதுக்கோட்டை:ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை…

போக்குவரத்து துறையில் மோசடி புகார் வழக்கு:செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம்

போக்குவரத்து துறையில் மோசடி…

சென்னை:போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக்…

தஞ்சையில் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சையில் 22ம் தேதி…

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த லாரி உரிமையாளர்கள் நல சங்கம் கோரிக்கை

மணல் குவாரிகளை அரசே…

வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல்…

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப் பாதை திட்டத்துக்கு ரயில்வே ஒப்புதல்

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப்…

ரூ.993 கோடி மதிப்பிலான அரக்கோணம் செங்கல்பட்டு…

ஏலகிரி மலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஏலகிரி மலையில் அரசுப்…

ஜோலார்பேட்டை:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி…

1 11 12 13 14 15