இன்றைய தமிழகம்

போலி மருந்துகளின் புழக்கத்தைத் தடுக்க, QR Code அச்சிடுவதை கட்டாயமாக்கிய ஒன்றிய அரசு

  1. Home
  2. »
  3. India News
  4. »
  5. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பேரணி

போலி மருந்துகளின் புழக்கத்தைத் தடுக்க, QR Code அச்சிடுவதை கட்டாயமாக்கிய ஒன்றிய அரசு

சந்தையில் போலி மருந்துகள் உலா வருவதை முற்றிலும் ஒழிப்பது மற்றும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்வது. தடுப்பூசிகள் (Vaccines), புற்றுநோய் மருந்துகள் (Anti-cancer drugs), போதைப்பொருள் மற்றும் மனநல மருந்துகள் ஆகியவற்றின் முதன்மைப் பேக்கிங்கில் QR Code கட்டாயம்.

ந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் மருந்தின் தனித்துவமான குறியீடு, பிராண்ட் பெயர், உற்பத்தி மற்றும் காலாவதியாகும் தேதி, பேட்ச் எண் (Batch Number) மற்றும் தயாரிப்பாளர் விவரங்களை எளிதாக அறிய முடியும். நீங்கள் வாங்கிய மருந்தின் அட்டையில் உள்ள விவரங்களும், மொபைல் திரையில் காட்டும் விவரங்களும் சரியாகப் பொருந்தினால், அது அசல் மருந்து என்பதை உறுதி செய்து கொள்ளலாம். இந்த புதிய நடைமுறை 2027 ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது.

சந்தையில் சட்டவிரோதமாக விற்கப்படும் போலி மற்றும் தரம் குறைந்த மருந்துகள் உங்கள் கைக்கு வருவதைத் தடுக்கிறது. புற்றுநோய் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் போன்ற மிக முக்கியமான மருந்துகளின் நம்பகத்தன்மையை நுகர்வோரே நேரடியாக உறுதி செய்ய முடிகிறது.மருந்துகளைப் பற்றிய துல்லியமான விபரங்களை சாதாரண மக்களும் உடனடியாகத் தெரிந்துகொள்ளும் வெளிப்படைத்தன்மை உருவாகிறது

மத்திய சுகாதார அமைச்சகம், Drugs Rules, 1945 சட்டத்தில் திருத்தம் செய்து இந்த மருந்துகளை ‘Schedule H2’ பிரிவின் கீழ் கொண்டு வந்துள்ளது. தடுப்பூசிகள், புற்றுநோய் மற்றும் மனநல மருந்துகளுக்கு 2027 ஜூலை 1 முதல் இந்த விதி கட்டாயமாகிறது. ஆன்டிபயாடிக்ஸ் (Antimicrobials) போன்ற மருந்துகளுக்கு 2028 ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.

சந்தையில் போலி மருந்துகள் உலா வருவதை முற்றிலும் ஒழிப்பது மற்றும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்வது. தடுப்பூசிகள் (Vaccines), புற்றுநோய் மருந்துகள் (Anti-cancer drugs), போதைப்பொருள் மற்றும் மனநல மருந்துகள் ஆகியவற்றின் முதன்மைப் பேக்கிங்கில் QR Code கட்டாயம். ந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் மருந்தின் தனித்துவமான குறியீடு, பிராண்ட் பெயர், உற்பத்தி மற்றும் காலாவதியாகும் தேதி, பேட்ச் எண் (Batch Number) மற்றும் தயாரிப்பாளர் விவரங்களை எளிதாக அறிய முடியும். நீங்கள் வாங்கிய […]

Recent News

நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி வாலிபர்கள், மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்துசெய்யக்…

புதுக்கோட்டை:ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை…

போக்குவரத்து துறையில் மோசடி புகார் வழக்கு:செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம்

போக்குவரத்து துறையில் மோசடி…

சென்னை:போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக்…

தஞ்சையில் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சையில் 22ம் தேதி…

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த லாரி உரிமையாளர்கள் நல சங்கம் கோரிக்கை

மணல் குவாரிகளை அரசே…

வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல்…

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப் பாதை திட்டத்துக்கு ரயில்வே ஒப்புதல்

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப்…

ரூ.993 கோடி மதிப்பிலான அரக்கோணம் செங்கல்பட்டு…

ஏலகிரி மலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஏலகிரி மலையில் அரசுப்…

ஜோலார்பேட்டை:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி…

1 25 26 27 28 29