
வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல் எம்சாண்ட் மற்றும் சவுடு ரப்பிஸ் லாரி உரிமையாளர்கள் நல சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டும் வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல் எம் சாண்ட் மற்றும் சவுடு ரப்பிஸ் லாரி உரிமையாளர்கள் நலசங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர் கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதிதாக முதல்வராக பொறுப் பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மணல் குவாரி எம் சாண்டு, கிராவல், கிரஷர் உள்ளிட்ட அனைத்து குவாரிகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். ஓவர் லோடு வாகனங்களை தடை செய்யவேண்டும் என வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல் எம்.சாண்ட் மற்றும் சவுடு ரப்பிஸ் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் பார்த்தசாரதி கோரிக்கை விடுத்தனர்.