இன்றைய தமிழகம்

மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமா

மத்திய சிறுபான்மையினர் நலத் துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உடனடியாக ஏற்றுக்கொண்டார்.

பிரதமர் மோடியின் ஆலோசனையின்பேரில், ஜார்ஜ் குரியன் அளித்த ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளார்.

ஜார்ஜ் குரியனின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் ஜூன் 21-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் குரியனை மீண்டும் வேட்பாளராக நிறுத்த வேண்டாம் என்று பாஜக முடிவு செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் தனது மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஜார்ஜ் குரியன் ஆகஸ்ட் 2024-ல் மாநிலங்களவை உறுப்பினரானார். அவர் ஜூன் 9, 2024 அன்று மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்றார். பின்னர் ஜூன் 11, 2024 அன்று சிறுபான்மையினர் நலத் துறை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை ஆகியவற்றின் மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார். மத்திய அமைச்சரவையில் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ஒரே அமைச்சராக ஜார்ஜ் குரியன் இருந்தார்.

ஜார்ஜ் குரியன் இதற்கு முன்பு தேசிய சிறுபான்மையினர் நல ஆணையத்தின் துணைத் தலைவராகவும், அப்போதைய ரயில்வே துறை மத்திய இணை அமைச்சரான ஓ.ராஜகோபாலின் சிறப்புப் பணி அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்த்தில் பிறந்த ஜார்ஜ் குரியன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய சிறுபான்மையினர் நலத் துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உடனடியாக ஏற்றுக்கொண்டார். பிரதமர் மோடியின் ஆலோசனையின்பேரில், ஜார்ஜ் குரியன் அளித்த ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளார். ஜார்ஜ் குரியனின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் ஜூன் 21-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் குரியனை மீண்டும் […]

Recent News

தலைமை செயலக ஊழியர்கள் 10 மணிக்கு முன் பணிக்கு வர உத்தரவு

தலைமை செயலக ஊழியர்கள்…

சென்னை:முதலமைச்சர் விஜய் தினமும் காலை 10…

ஐ.ஐ.டி. சேர்க்கை விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம்

ஐ.ஐ.டி. சேர்க்கை விண்ணப்பங்கள்…

ஈரோடு, கோபிசெட்டிபாளையம் சென்னை:ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்…

வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில்22ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில்22ம்…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே 2026 மாதத்திற்கான…

நெல்லையில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட விவிபேட் இயந்திர தெர்மல் பேப்பர் ரோல் அகற்றும் பணி

நெல்லையில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட…

மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.ரா.சுகுமார் ஆய்வு திருநெல்வேலி…

சேலம் மாவட்டத்தில் 22ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் 22ம்…

மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தகவல் சேலம்…

தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு…

பங்கேற்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு தேனி:தனியார்துறை…

1 10 11 12 13 14 16