மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூன் 13 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

மயிலாடுதுறை:
உச்சநீதிமன்ற தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சென்னை உயர் நீதிமன் றத்தின் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு உத்தரவின்படி, மயிலாடுதுறை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் மாவட்ட அமர்வு நீதிபதி டாக்டர்.எல்.எஸ். சத்தியமூர்த்தி, அறி வுறுத் தலின்படி மயி லாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 13.06.2026 அன்று காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை தேசிய மக்கள் நீதி மன்றம் நடைபெற உள்ளது.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் சிவில் வழக்குகள், குற்றவியல் வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள் காசோலை மோசடி வழக்குகள், பண மோசடி வழக்குகள், வங்கி சார்ந்த வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள். குடும்ப நல வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் உள்ளிட்ட சமரசம் செய்யக்கூடிய வழக்குகள் எடுத்துக் கொள் ளப்படுகின்றன.

மக்கள் நீதிமன்றத்தில் சமரசம் மூலம் தீர்வு காணப்படும் வழக்குக ளுக்கு மேல்முறையீடு கிடையாது. மேலும் வழக்காடிகளின் நேரமும், செலவும் மிச்சமாகும் என்பதால், பொதுமக்கள் மற்றும் வழக்காடிகள் தங்களது வழக்கறிஞர்கள் மூலம் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சீர்காழி சார்பு நீதிமன்ற வளாகம் மற்றும் தரங்கம்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகங்களிலும் வட்ட சட்டப்பணிகள் குழு மூலம் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி மாண்புமிகு டாக்டர். எல்.எஸ்.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை:உச்சநீதிமன்ற தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சென்னை உயர் நீதிமன் றத்தின் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு உத்தரவின்படி, மயிலாடுதுறை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் மாவட்ட அமர்வு நீதிபதி டாக்டர்.எல்.எஸ். சத்தியமூர்த்தி, அறி வுறுத் தலின்படி மயி லாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 13.06.2026 அன்று காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை தேசிய மக்கள் நீதி மன்றம் நடைபெற உள்ளது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் சிவில் […]

Recent News

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய…

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம்,…

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி கோலாகலம்

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி…

50,000க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிச்செடிகள் காட்சிப்படுத்தல்…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

10 ஆம் வகுப்பு…

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு…

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு…

விண்ணப்பிக்க சேலம் கலெக்டர் அறிவுறுத்தல் சேலம்:சேலம்…

உதகையில் நாளை மலைப்பயிர் கண்காட்சி தொடக்கம்

உதகையில் நாளை மலைப்பயிர்…

நீலகிரி:2026 ஆம் ஆண்டின் முதல் காட்சியாக…

சிகார் புனித பதுவை அந்தோணியார் ஆலய திருத்தேர் பவனி

சிகார் புனித பதுவை…

நாகை:நாகை அருகே பழமை வாய்ந்த சிகார்…

1 3 4 5 6 7 11