இன்றைய தமிழகம்

முதல்வர் அறிவித்த 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை:
கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 மது பான சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும் என்ற முதல்வர் விஜய்யின் அறிவிப்புக்கு இணங்க இதுவரை 436 கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள கடைகளை மூட துறையின் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவு றுத்தி இருப்பதா கவும் அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில், “தமிழக முதல்வர் கடந்த 11 அன்று, கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய வற்றின் அருகில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடிட அரசாணை பிறப்பிக்கப்பட்டதன்
அடிப்படையில், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் க.விக்னேஷ் (சனிக்கிழமை) தமிழ்நாடு மாநில வாணிபக் கழக தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இன்று வரை 436 மதுபான சில்லறை விற் பனைக் கடைகளும் அவற் றுடன் இணைந்துள்ள மதுக்கூடங்களும் மூடப் பட்டுள்ளன. மீதமுள்ள மதுபான சில்லறை விற் பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக் கூடங்களை மூடுவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் விக்னேஷ், அதிகாரிகளுக்கு அறி வுறுத்தினார்.
மூடப்பட்ட மது பான சில்லறை விற்ப னைக் கடைகளில் பணிபுரிந்து வந்த கடைப்பணியாளர்களின் நலன் பாதிக்கப்படாத வகையில் அருகிலுள்ள மதுபான சில்லறை விற் பனைக் கடைகளில் பணியமர்த்துமாறு அதி காரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும், அனைத்து சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அத னுடன் இணைந்துள்ள மதுக்கூடங்கள் இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டு மெனவும், அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்கும் கடைப்பணியாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.
விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்கும் டாஸ்மாக் பணி யாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அமைச்சர் விக்னேஷ் அறிவுறுத்தினார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு தகவல் சென்னை:கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 மது பான சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும் என்ற முதல்வர் விஜய்யின் அறிவிப்புக்கு இணங்க இதுவரை 436 கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள கடைகளை மூட துறையின் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவு றுத்தி இருப்பதா கவும் அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில், “தமிழக முதல்வர் கடந்த 11 அன்று, கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய […]

Recent News

Bethlehem Kudumba Unit  -Auguest 21

Bethlehem Kudumba Unit…

இந்தப் படம், மாபெரும் வெற்றி பெற்ற…

உள்ளாட்சி தேர்தலில்  வெற்றி பெற செய்யுங்கள் -அமைச்சர் கீர்த்தனா

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி…

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில்…

ஃபோர்டு நிறுவனத்தினருடன் முதல்வர் சந்திப்பு

ஃபோர்டு நிறுவனத்தினருடன் முதல்வர்…

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமைச்…

பெருந்தலைவர் காமராஜர் வாழ்நாள் முழுவதும் எளிமை, நேர்மை, மக்கள் நலன், கல்வி வளர்ச்சியை உயர்த்தி பிடித்த மனிதர் -அமைச்சர் கீர்த்தனா

பெருந்தலைவர் காமராஜர் வாழ்நாள்…

ஜுலை 15  பெருந்தலைவர் காமராஜர் அவர்களின்…

தங்கக் காலணியை வென்று எம்பாப்பே மீண்டும் சாதனை!

தங்கக் காலணியை வென்று…

2026 ஃபிஃபா உலகக்கோப்பையில் அதிக கோல்களை…

என் மகன் விஜய் சாருடன்  பணியாற்றிகிறார்

என் மகன் விஜய்…

என்னுடைய மகன் IAS அதிகாரியாக விஜய்…

1 3 4 5 6 7 31