
புதிய அரசு பதவியேற்று நீண்ட நாட்கள் ஆகியும், முதல் அமைச்சர் விஜய் முழுமையான அமைச்சரவையை அமைக்காதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலத்தில் வேளாண்மை, உயர்கல்வி, போக்குவரத்து உள்ளிட்ட 20 முக்கிய துறைகள் முழுமையான நிர்வாக கவனத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. அமைச்சரவை விரிவாக்கத்தில் ஏற்படும் காலதாமதம் அரசின் செயல்திறனை பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.