இன்றைய தமிழகம்

விஜய் முதல்வரானதற்கு நன்றி காணிக்கையாக வேளாங்கண்ணியில் முட்டிப்போட்டு வேண்டுதல் நிறைவேற்றிய தவெக நிர்வாகி

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. மகன் கண் முன்னே தந்தை கொலை: குற்றவாளியை உடனே கைது செய்ய ஜி.கே.வாசன்…

விஜய் முதல்வரானதற்கு நன்றி காணிக்கையாக வேளாங்கண்ணியில் முட்டிப்போட்டு வேண்டுதல் நிறைவேற்றிய தவெக நிர்வாகி

நாகப்பட்டினம்:
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட் டியிட்டு வெற்றி பெற்று தமிழக முதலைமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட விஜய் வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என தவெக நிர்வாகியும் நடிகருமான திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த ஜெரால்டு மில்டன் வேளாங்கண்ணி மாதா கோவிலில் வேண்டி கொண்டுள்ளார்.

இவர் திருச்சி கிழக்கு தொகுதியில் தேர்தல் பொறுப்பாளராகவும் இருந்து விஜய் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக பிரச்சாரம் செய்துள்ளார். இந்த நிலையில் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி அடைந்து முதல்வராக ஆன நிலையில் தனது வேண்டுதலை நிறைவேற்ற தனது ஆதரவாளர்களுடன் வேளாங்கண்ணிக்கு இன்று வருகை தந்தார்.

உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்ய மாதா பேராலயத்தில் முட்டி போட்டு நடந்து சென்று தனது வேண்டுதலை நிறை வேற்றினார். தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி மனமுருகி பிரார்த்தனை செய்தார்.

மேலும் திருச்சி கிழக்கு தொகுதியில் நடைப்பெற உள்ள இடைத் தேர்தலிலும் தவெக வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என வேண்டுதலை வைத்தும் பிரார்த்தனை செய்தார்.

நாகப்பட்டினம்:தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட் டியிட்டு வெற்றி பெற்று தமிழக முதலைமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட விஜய் வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என தவெக நிர்வாகியும் நடிகருமான திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த ஜெரால்டு மில்டன் வேளாங்கண்ணி மாதா கோவிலில் வேண்டி கொண்டுள்ளார். இவர் திருச்சி கிழக்கு தொகுதியில் […]

Recent News

அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்கிறார்களா? புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு

அரசு ஊழியர்கள் லஞ்சம்…

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் முதல்…

1 13 14 15