அரக்கோணம்: அரக்கோணம் தருமர் கோவிலில் பட்டாபிஷேக விழா நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் அமைந்துள்ள தர்மராஜா கோவில் கிருஷ்ண பாண்டவர் சமேத திரௌபதி அம்மன் கோயிலில் பிரம்மாண்ட முறையில் கடந்த 7ம் தேதி அக்னி வசந்த விழா கொடி யேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக 24ம் தேதி துரி யோதனன் படுகளமும், பூ முடிப்பும், அன்று மாலை பிரமாண்டமான தீ மிதி விழாவும் நடைபெற்றது. கடந்த 27ம் தேதி மிக சிறப் பாக சாந்தி பருவமும், இறுதி நாளான 28ம் தேதி தர்மர் பட்டாபிஷேகமும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பானுமதி மகன் ராம்குமார், பூர்ணிமா குடும்பத்தார் சார்பில் செய்திருந்தனர். இவ்விழாவில் பழனிமேஸ் திரி முருகன் செட்டியார் பச்சை உள்ளிட்ட கோவில் தர்மகர்த்தாக்கள் பூசாரி டில்லி ரமேஷ் மற்றும் குருக்கள், பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் 500 நபர்களுக்கு மேல் அன்ன தானம் வழங்கப்பட்டது.
Live News