இருசக்கர வாகனம் பழுது பார்த்தல் இலவச பயிற்சி – கனரா வங்கி அறிவிப்பு

திருப்பூர்: திருப்பூர் காங்கயம் ரோடு, முதலிப்பாளையம் பிரிவில் அமைந்துள்ள கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்த்தல் மற்றும் சரிசெய்தல் (Two Wheeler Service & Repair) தொடர்பான 30 நாள் முழுநேர இலவச பயிற்சி நடைபெற உள்ளது.

இந்த பயிற்சி 03.06.2026 (புதன்கிழமை) அன்று துவங்குகிறது. பயிற்சியில் சேர குறைந்த அளவிலான காலி இடங்கள் மட்டுமே உள்ளதால் விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி விவரங்கள்:

  • 30 நாள் முழுநேர பயிற்சி
  • எழுத படிக்க தெரிந்த 18 முதல் 50 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்
  • பயிற்சிக்கு எந்த கட்டணமும் இல்லை
  • ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி தங்கும் விடுதி வசதி உள்ளது
  • காலை, மாலை தேநீர் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும்
  • பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்
  • பயிற்சி முடிந்த பின் தொழில் தொடங்க கடன் ஆலோசனையும் வழங்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் நேரடியாக கீழ்கண்ட முகவரியில் விண்ணப்பிக்கலாம்:

முகவரி:
கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம்,
335/B1, வஞ்சியம்மன் கோவில் எதிரில்,
முதலிப்பாளையம், காங்கேயம் பிரிவு சாலை,
திருப்பூர் – 641606.

“முதலில் வருபவருக்கு முன்னுரிமை” என்ற அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு:

  • 94890 43923
  • 99525 18441
  • 86105 33436

இந்த தகவலை பயிற்சி நிலைய இயக்குநர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: திருப்பூர் காங்கயம் ரோடு, முதலிப்பாளையம் பிரிவில் அமைந்துள்ள கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்த்தல் மற்றும் சரிசெய்தல் (Two Wheeler Service & Repair) தொடர்பான 30 நாள் முழுநேர இலவச பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சி 03.06.2026 (புதன்கிழமை) அன்று துவங்குகிறது. பயிற்சியில் சேர குறைந்த அளவிலான காலி இடங்கள் மட்டுமே உள்ளதால் விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி விவரங்கள்: விண்ணப்பிக்கும் முறை: […]

Recent News

நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி வாலிபர்கள், மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்துசெய்யக்…

புதுக்கோட்டை:ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை…

போக்குவரத்து துறையில் மோசடி புகார் வழக்கு:செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம்

போக்குவரத்து துறையில் மோசடி…

சென்னை:போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக்…

தஞ்சையில் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சையில் 22ம் தேதி…

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த லாரி உரிமையாளர்கள் நல சங்கம் கோரிக்கை

மணல் குவாரிகளை அரசே…

வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல்…

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப் பாதை திட்டத்துக்கு ரயில்வே ஒப்புதல்

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப்…

ரூ.993 கோடி மதிப்பிலான அரக்கோணம் செங்கல்பட்டு…

ஏலகிரி மலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஏலகிரி மலையில் அரசுப்…

ஜோலார்பேட்டை:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி…

1 11 12 13 14 15