திருப்பூர்: திருப்பூர் காங்கயம் ரோடு, முதலிப்பாளையம் பிரிவில் அமைந்துள்ள கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்த்தல் மற்றும் சரிசெய்தல் (Two Wheeler Service & Repair) தொடர்பான 30 நாள் முழுநேர இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
இந்த பயிற்சி 03.06.2026 (புதன்கிழமை) அன்று துவங்குகிறது. பயிற்சியில் சேர குறைந்த அளவிலான காலி இடங்கள் மட்டுமே உள்ளதால் விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி விவரங்கள்:
- 30 நாள் முழுநேர பயிற்சி
- எழுத படிக்க தெரிந்த 18 முதல் 50 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்
- பயிற்சிக்கு எந்த கட்டணமும் இல்லை
- ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி தங்கும் விடுதி வசதி உள்ளது
- காலை, மாலை தேநீர் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும்
- பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்
- பயிற்சி முடிந்த பின் தொழில் தொடங்க கடன் ஆலோசனையும் வழங்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் நேரடியாக கீழ்கண்ட முகவரியில் விண்ணப்பிக்கலாம்:
முகவரி:
கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம்,
335/B1, வஞ்சியம்மன் கோவில் எதிரில்,
முதலிப்பாளையம், காங்கேயம் பிரிவு சாலை,
திருப்பூர் – 641606.
“முதலில் வருபவருக்கு முன்னுரிமை” என்ற அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு:
- 94890 43923
- 99525 18441
- 86105 33436
இந்த தகவலை பயிற்சி நிலைய இயக்குநர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.