இன்றைய தமிழகம்

கோவை சிறுமி பாலியன் வன்கொடுமை செய்து கொலை குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு சட்டத்தீன் கீழ் கடுமையான நடவடிக்கை பாயும்

  1. Home
  2. »
  3. Tamil Nadu
  4. »
  5. விஜயின் கல்விக் கரம்-கல்வி உதவி திட்டம்

கோவை சிறுமி பாலியன் வன்கொடுமை செய்து கொலை குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு சட்டத்தீன் கீழ் கடுமையான நடவடிக்கை பாயும்

தமிழக முதல்அமைச்சர் ஜோசப் விஜய் உறுதி

சென்னை:
கோவை சூலூரை அடுத்த கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப் பட்டு ள்ளனர்.
இந்த நிலையில் குழந்தைகளுக்கு எதிராக அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத் தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும் என்று முதல் அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
கோயம்புத்தூரில் 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
தங்கள் உயிருக்கு யிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்தசொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறேன் இந்த வழக்கில் தொடர்பு டையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவை யான அனைத்து நடவடிக் கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தர விட்டுள்ளேன்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத் தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதி யுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்அமைச்சர் ஜோசப் விஜய் உறுதி சென்னை:கோவை சூலூரை அடுத்த கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப் பட்டு ள்ளனர்.இந்த நிலையில் குழந்தைகளுக்கு எதிராக அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத் தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும் என்று முதல் அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:கோயம்புத்தூரில் 10 […]

Recent News

சர்தார்-2’ படக்குழு  வெளியிட்ட போஸ்டர்

சர்தார்-2’ படக்குழு வெளியிட்ட…

நடிகை ரஜிஷா விஜயனின் பிறந்தநாளை முன்னிட்டு…

அனைவரும் கல்வி கற்க விதை  இ ட்டவர்- கனிமொழி

அனைவரும் கல்வி கற்க…

தமிழ் மக்களின் உயர்வுக்கு உழைத்த பெருந்தலைவர்…

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு:

உலக மக்கள் தொகை…

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்…

புதிய மருத்துவ கட்டிடங்கள் – முதல்வர் விஜய் திறந்து வைப்பு

புதிய மருத்துவ கட்டிடங்கள்…

சென்னை: “நலம் TN” என்ற தமிழ்நாடு சுகாதார…

அமெரிக்கா இனி ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாவலன் என்று அழைக்கப்படும்.20 சதவீத கட்டணம் உடனடியாக வசூலிக்கப்படும்-அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்கா இனி ஹார்முஸ்…

வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தனது முழுமையான…

1 8 9 10 11 12 31