இன்றைய தமிழகம்

நடைபாதை கடைகளில் பெண் வியாபாரிகளிடம் தவெக நிர்வாகி மாமூல் வசூல்

சேலம் புதிய பஸ் நிலைய நடைபாதையில் சிறிய அளவிலான கடை வைத்திருக்கும் பெண் வியாபாரிகளிடம் தவெக நிர்வாகி மாமூல் வசூலில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.தவெக அரசு பொறுப்பேற்றது முதல் லஞ்சம் இருக்காது.

யாருக்கும் கமிஷன் கொடுக்க தேவையில்லை என்றும், தூய்மையான ஆட்சி நடத்துவதாகவும் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான விஜய் மற்றும் அமைச்சர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில், சேலம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை கடைகளில் பூக்கடை, பழக்கடைகள் வைத்துள்ள பெண்களிடம் கட்சி நிர்வாகி மாமூல் வசூலிக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட வெளி ஊர்களுக்கு, வெளி மாநிலத்துக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதையில் சிறிய அளவிலான கடைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த கடைகளில் தவெகவை சேர்ந்த 45வது கோட்ட துணை ெசயலாளரான முரளி என்பவர், 8மணி நேரத்திற்கு ரூ.150, நாள் ஒன்றுக்கு ரூ.450 என்று மாமூல் தர வேண்டும் என்று கூறி, பெண் வியாபாரிகளிடம் வசூல் செய்து வருவதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மாநகராட்சியில் எந்த டெண்டரும் எடுக்காத நிலையில், எந்தவித அனுமதியும் இல்லாமல் இதுபோன்று நடைபாதையில் உள்ள சிறிய வியாபாரிகளிடம் மாமூலாக பணம் வசூல் செய்யும் தவெக நிர்வாகி மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சேலம் புதிய பஸ் நிலைய நடைபாதையில் சிறிய அளவிலான கடை வைத்திருக்கும் பெண் வியாபாரிகளிடம் தவெக நிர்வாகி மாமூல் வசூலில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.தவெக அரசு பொறுப்பேற்றது முதல் லஞ்சம் இருக்காது. யாருக்கும் கமிஷன் கொடுக்க தேவையில்லை என்றும், தூய்மையான ஆட்சி நடத்துவதாகவும் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான விஜய் மற்றும் அமைச்சர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில், சேலம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை கடைகளில் பூக்கடை, பழக்கடைகள் வைத்துள்ள பெண்களிடம் கட்சி நிர்வாகி […]

Recent News

தலைமை செயலக ஊழியர்கள் 10 மணிக்கு முன் பணிக்கு வர உத்தரவு

தலைமை செயலக ஊழியர்கள்…

சென்னை:முதலமைச்சர் விஜய் தினமும் காலை 10…

ஐ.ஐ.டி. சேர்க்கை விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம்

ஐ.ஐ.டி. சேர்க்கை விண்ணப்பங்கள்…

ஈரோடு, கோபிசெட்டிபாளையம் சென்னை:ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்…

வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில்22ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில்22ம்…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே 2026 மாதத்திற்கான…

நெல்லையில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட விவிபேட் இயந்திர தெர்மல் பேப்பர் ரோல் அகற்றும் பணி

நெல்லையில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட…

மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.ரா.சுகுமார் ஆய்வு திருநெல்வேலி…

சேலம் மாவட்டத்தில் 22ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் 22ம்…

மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தகவல் சேலம்…

தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு…

பங்கேற்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு தேனி:தனியார்துறை…

1 10 11 12 13 14 16