மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.ரா.சுகுமார் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்குபதிவின் போது பயன்படுத்தப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் உள்ள தெர்மல் பேப்பர் ரோல் மற்றும் முகவரி அட்டையினை அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா. சுகுமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 இன் போது வாக்குப்பதிவில் பயன்படுத்தப்பட்ட விவிபேட் இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் திருநெல்வேலிவட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலர், சென்னை அவர்களின் கடிதத்தில், வாக்கு எண்ணிக்கை நிறைவடை ந்த நாட்களுக்கு பின்னர், வாக்குபதிவின் போது பயன்படுத்தப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் உள்ள, தெர்மல் பேப்பர் ரோல் மற்றும் முகவரி அட்டையினை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
எனவே, மேற்கண்ட இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவுறுத்தலின்படி வாக்குபதிவின் போது பயன்படுத்தப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் உள்ள, தெர்மல் பேப்பர் ரோல் மற்றும் முக வரி அட்டையினை அகற் றும் பணிகள் இன்று (19.05.2026) இப்பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா. சுகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேரமுக உதவியாளர் (தேர்தல்) சுப்பிரமணிய. தேர்தல் வட்டாட்சியர் முருகன் அவர்கள் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.