
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண் ருட்டியில், பண்ருட்டி அதிமுக வடக்கு ஒன்றிய சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பண்ருட்டி வடக்கு ஒன்றியம் கழக செயலாளர் எம்.சிவா தலைமையில் அவைத்தலைவர் சந்தானம் முன்னிலை வைத்தார். நடைபெற்ற கூட்டத் திற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.தாமோதரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடர்ந்து செயல்பட ஆதரிப்பதாகவும், கட்சி வளர்ச்சி உட்பட பல்வேறு தீர்மானங்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கனகராஜ், பொதுக்குழு உறுப்பினர் கள்ளிப்பட்டு ராஜேந்திரன், பண்ருட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன், பேரூராட்சி கழக செயலாளர் சுரேஷ், சாத்திப்பட்டு பிரபா, தனபால் மற்றும் வடக்கு ஒன்றிய கிளை செயலாளர்கள், பொறுப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.