புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை:
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்து, ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென வலி யுறுத்தியும் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் த.செங்கோடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், சிபிஐ(எம்எல்) கட்சியின் மாவட்டச் செய லாளர் சி.ரெங்கசாமி ஆகியோர் தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை, சிபிஐ மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் முத்து. உத்திராபதி, சிபிஐ (எம்எல்) மாநில நிலைக் குழு உறுப்பினர் வீ.மு.வளத்தான் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சண் முகம், சு.மதியழகன், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்தனன், கி.ஜெயபாலன், டி.சலோமி, சிபிஐ சார்பில் சுந்தர்ராஜன், சிபிஎம் நகரச் செயலாளர் எஸ்.பாண்டியன், சிபிஐ நகரச் செயலாளர் எம்.பி. நாடிமுத்து, சிபிஐ(எம்எல்) கா. ஜோதிவேல் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை:அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்து, ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென வலி யுறுத்தியும் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் த.செங்கோடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், சிபிஐ(எம்எல்) கட்சியின் […]

Recent News

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த லாரி உரிமையாளர்கள் நல சங்கம் கோரிக்கை

மணல் குவாரிகளை அரசே…

வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல்…

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப் பாதை திட்டத்துக்கு ரயில்வே ஒப்புதல்

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப்…

ரூ.993 கோடி மதிப்பிலான அரக்கோணம் செங்கல்பட்டு…

ஏலகிரி மலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஏலகிரி மலையில் அரசுப்…

ஜோலார்பேட்டை:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி…

கன்னியாகுமரியில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

கன்னியாகுமரியில் சிறந்த மதிப்பெண்…

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில்…

கடலூர்: ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து நாளை மருந்து கடைகள் மூடல்

கடலூர்: ஆன்லைன் வர்த்தகத்தை…

கடலூர் மாவட்ட மருந்தக நலசங்கம் சார்பில்…

தவெக அமைச்சரவையில் இணையும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யார்?

தவெக அமைச்சரவையில் இணையும்…

சென்னை:தேர்தலுக்கு பின்பு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ்…

1 8 9 10 11