இன்றைய தமிழகம்

போக்குவரத்து துறையில் மோசடி புகார் வழக்கு:செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம்

  1. Home
  2. »
  3. Tamil Nadu
  4. »
  5. விஜயின் கல்விக் கரம்-கல்வி உதவி திட்டம்

போக்குவரத்து துறையில் மோசடி புகார் வழக்கு:செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம்

சென்னை:
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோர் மீது பண மோசடி குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி, அவ ரது தம்பி அசோக் குமார் உட்பட 4 பேர் மீது வழக்கு மாநில அரசு அனு மதி இல்லாததால் நீதிமன்ற விசாரணை இன்னும் தொடங்க வில்லை. இந்த நிலையில், போக்கு வரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவ தாகக் கூறி பணம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த 15ம் தேதி அமலாக்கத்துறை சார்பில் 3 பக்க கடிதம் தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கு அனுப்பப்பட்டுள்ளது. கவர்னரிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில், மாநில அரசிடமே அனுமதி பெற வேண்டும் என்ற விதிகளின்படி தற்போது அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

புகார் தொடர்புடைய தகுந்த ஆதாரங்கள், ரகசிய விசாரணை குறிப்புகள், புகார் நகல் ஆகியவற்றை உள்ளடக்கிய பென் டிரைவை இணைத்து, தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கு அம லாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. இந்த கடிதம் தலைமைச் செயலாளர் அலுவலகத்தால் முறையா கப் பெறப்பட்டு, அதற்கான ஒப்புகை பெறப்பட்டதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

செந்தில்பாலாஜி ஆளும் கட்சி மற்றும் அமைச் சரவையில் உறுப்பினராக இருந்ததால், முந்தைய திமுக அரசு அனுமதி வழங்குவதில் தாமதம் செய்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. நீதிமன்றம் முறையாக விசாரணையைத் தொடங்க ஏதுவாக, உடனடியாக ஒப்புதல் வழங்குமாறு தவெக தலைமையிலான மாநில அரசை அமலாக்கத்துறை தற்போது வலியுறுத்தியுள்ளது. செந்தில் பாலாஜி மீதான விசாரணைக்கு தவெக அரசு அனுமதி அளிக்குமா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை:போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோர் மீது பண மோசடி குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி, அவ ரது தம்பி அசோக் குமார் உட்பட 4 பேர் மீது வழக்கு மாநில அரசு அனு மதி இல்லாததால் நீதிமன்ற விசாரணை இன்னும் தொடங்க வில்லை. இந்த நிலையில், போக்கு வரத்துத்துறையில் வேலை […]

Recent News

நீர் எழில் பள்ளி திட்டம் -அமைச்சர் தொடங்கி வைத்தார்

நீர் எழில் பள்ளி…

சென்னை, எழும்பூர், மாகாண மகளிர் மேல்நிலைப்…

CJP போராட்டத்திற்கு திருமாவளவன் ஆதரவு

CJP போராட்டத்திற்கு திருமாவளவன்…

வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: நீட் தேர்வில்…

திருவண்ணாமலையில் நியாய விலை கடையில் கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலையில் நியாய விலை…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க்,…

ஆகஸ்ட் 2-ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்

ஆகஸ்ட் 2-ல் தேமுதிக…

தேமுதிக கழக பொதுச் செயலாளர் பிரேமலதா…

நீட் ஒழிப்பு தான் ஒரே தீர்வு-மு.க.ஸ்டாலின்

நீட் ஒழிப்பு தான்…

புடெல்லியில் நீட்டுக்கு எதிராக மாணவர்கள் போரடும்…

ராகுல் கைது -தவெக கண்டனம்

ராகுல் கைது -தவெக…

அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை…

1 2 3 4 31