போக்குவரத்து துறையில் மோசடி புகார் வழக்கு:செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம்

  1. Home
  2. »
  3. Tamil Nadu
  4. »
  5. முதல்வர் அறிவித்த 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்

போக்குவரத்து துறையில் மோசடி புகார் வழக்கு:செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம்

சென்னை:
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோர் மீது பண மோசடி குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி, அவ ரது தம்பி அசோக் குமார் உட்பட 4 பேர் மீது வழக்கு மாநில அரசு அனு மதி இல்லாததால் நீதிமன்ற விசாரணை இன்னும் தொடங்க வில்லை. இந்த நிலையில், போக்கு வரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவ தாகக் கூறி பணம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த 15ம் தேதி அமலாக்கத்துறை சார்பில் 3 பக்க கடிதம் தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கு அனுப்பப்பட்டுள்ளது. கவர்னரிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில், மாநில அரசிடமே அனுமதி பெற வேண்டும் என்ற விதிகளின்படி தற்போது அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

புகார் தொடர்புடைய தகுந்த ஆதாரங்கள், ரகசிய விசாரணை குறிப்புகள், புகார் நகல் ஆகியவற்றை உள்ளடக்கிய பென் டிரைவை இணைத்து, தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கு அம லாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. இந்த கடிதம் தலைமைச் செயலாளர் அலுவலகத்தால் முறையா கப் பெறப்பட்டு, அதற்கான ஒப்புகை பெறப்பட்டதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

செந்தில்பாலாஜி ஆளும் கட்சி மற்றும் அமைச் சரவையில் உறுப்பினராக இருந்ததால், முந்தைய திமுக அரசு அனுமதி வழங்குவதில் தாமதம் செய்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. நீதிமன்றம் முறையாக விசாரணையைத் தொடங்க ஏதுவாக, உடனடியாக ஒப்புதல் வழங்குமாறு தவெக தலைமையிலான மாநில அரசை அமலாக்கத்துறை தற்போது வலியுறுத்தியுள்ளது. செந்தில் பாலாஜி மீதான விசாரணைக்கு தவெக அரசு அனுமதி அளிக்குமா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை:போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோர் மீது பண மோசடி குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி, அவ ரது தம்பி அசோக் குமார் உட்பட 4 பேர் மீது வழக்கு மாநில அரசு அனு மதி இல்லாததால் நீதிமன்ற விசாரணை இன்னும் தொடங்க வில்லை. இந்த நிலையில், போக்கு வரத்துத்துறையில் வேலை […]

Recent News

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு…

சென்னை:முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில்…

பண்ருட்டி அதிமுக வடக்கு ஒன்றிய அதிமுக ஆலோசனை கூட்டம்

பண்ருட்டி அதிமுக வடக்கு…

கடலூர்:கடலூர் மாவட்டம் பண் ருட்டியில், பண்ருட்டி…

100 சதவீத தேர்ச்சி பெற்ற ஸ்ரீ நாராயணகுரு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

100 சதவீத தேர்ச்சி…

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் கோவில் தெருவில்…

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும்…

அமைச்சர் நிர்மல் குமார் உறுதி சென்னை:“தமிழகத்தில்…

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர்…

மயிலாடுதுறை:முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி…

குற்றால சீசனில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய என்ன செய்ய வேண்டும்

குற்றால சீசனில் பயணிகள்…

அதிகாரிகளுடன் தென்காசி ஆட்சியர் ஆலோசனை தென்காசி:தென்காசி…

1 2 3 4 5 11