இன்றைய தமிழகம்

மகன் கண் முன்னே தந்தை கொலை: குற்றவாளியை உடனே கைது செய்ய ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம்; நான் ஏன் அஞ்ச வேண்டும்?”-செந்தில் பாலாஜி

மகன் கண் முன்னே தந்தை கொலை: குற்றவாளியை உடனே கைது செய்ய ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

திருவாரூர்: தமிழ் மாநில காங்கி ரஸ்(மூ) தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில், திருவாரூர் மாவட்டத்தில் மகள் கண் முன்பே தந்தை கொலை செய்யப்பட்டது. மிகவும் கண்டிக்கத்தக்கத குற்றவாளிகளை உடனே கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி, அதிகபட்ச தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் தமிழக த.வெ.க அரசு பொது மக்களுக்கான பது காப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காரணம் ஆட்சி பொறுப்பேற்றது முதல் மாநிலம் முழுவதும் அவ் வப்போது ஆங்காங்கே கொலைகள் நடைபெறுவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று கூட திருவாரூர் மாவட்டம் சேங்காளிபுரம் பகுதியில், மது போதையில் 6 பேர் கொண்ட கும்பல் ஒரு வீட்டிற்குள் புகுந்து ஒருவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது கொடுமை. கொலையாளிகள் மகளின் கழுத்தில் அரி வாளை வைத்து மிரட்டி, தந்தையின் கொடூர கொலையை நேரில் பார்க்க வைத்தனர். மேலும் அவரது மனைவி மற்றும் மகனும் இத்தாக்குதலில் காயமடைந்து மருத் துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். இதற்கெல்லம் காரணம் போதைப்பொருட்கள் என்றாலும் காவல்துறை யினரின் மீதும், சட்டம் ஒழுங்கின் மீதும், தண் டனை மீதும் பயம் இல்லாத நிலையை வெளிப்படுத்துகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக புதிதாக ஆட்சி செய்யும் தமிழக அரசின் மீது குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு புயம் இல்லாததும் கூட. எனவே தமிழக அரசு கொலை செய்த குற்ற வாளிகளை உடனே கண் டுபிடித்து, கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி அதிக பட்ச தண்டனைப் பெற்றுத்தர வேண்டும். மேலும் தமிழகம் முழுவதும் போதைப்பொருட்கள் விற்பனை, பதுக்கல், பயன்படுத்துதல் ஆகிய வற்றுக்கு எதிரான நடவ டிக்கைகளை மேற் கொண்டு போதைப் பொருள் புழக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். எனவே தமிழக அரசு மாநிலம் முழு வதும் காவல்துறையினரின் கண்காணிப்பு நடவடிக் கைகளை தொடர்ந்து மேற் கொண்டு, கொலைகள் நடைபெறாமல் இருக்கும் வகையில், மக்களுக்கான பாதுகாப்பில் உறுதியைக் கொடுக்கும் வகையில் ஆட்சி செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன். உயிரிழந்தவரின் குடும் பத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

திருவாரூர்: தமிழ் மாநில காங்கி ரஸ்(மூ) தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில், திருவாரூர் மாவட்டத்தில் மகள் கண் முன்பே தந்தை கொலை செய்யப்பட்டது. மிகவும் கண்டிக்கத்தக்கத குற்றவாளிகளை உடனே கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி, அதிகபட்ச தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் தமிழக த.வெ.க அரசு பொது மக்களுக்கான பது காப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காரணம் ஆட்சி பொறுப்பேற்றது முதல் மாநிலம் முழுவதும் அவ் வப்போது ஆங்காங்கே கொலைகள் நடைபெறுவது மக்களுக்கு […]

Recent News

விடுதி கட்டணம் உயர்வு-பழனியில்

விடுதி கட்டணம் உயர்வு-பழனியில்

பழனி கோயில் தங்கும் விடுதி அறைகளின்…

சென்னையில் ஜூலை 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்

சென்னையில் ஜூலை 20-ம்…

சென்னை: தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளர்கள் சங்கத்தின் மாநிலத்…

அடிடாஸ் ஷூவில் ‘ப்ரியமுடன்- தமிழக அரசு ஒப்பந்தம்

அடிடாஸ் ஷூவில் ‘ப்ரியமுடன்-…

கரூரில் ₹850 கோடி முதலீட்டில் அமைக்கப்படும்…

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி

வெற்றிமாறன் இயக்கி, சாய் அப்யங்கர் இசையில்…

பாஜகவுக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம்

பாஜகவுக்கு மம்தா பானர்ஜி…

கொல்கத்தா: “என்னை மவுனமாக்க வேண்டுமானால் நீங்கள்…

1 10 11 12 13 14 31