இன்றைய தமிழகம்

மகன் கண் முன்னே தந்தை கொலை: குற்றவாளியை உடனே கைது செய்ய ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம்; நான் ஏன் அஞ்ச வேண்டும்?”-செந்தில் பாலாஜி

மகன் கண் முன்னே தந்தை கொலை: குற்றவாளியை உடனே கைது செய்ய ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

திருவாரூர்: தமிழ் மாநில காங்கி ரஸ்(மூ) தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில், திருவாரூர் மாவட்டத்தில் மகள் கண் முன்பே தந்தை கொலை செய்யப்பட்டது. மிகவும் கண்டிக்கத்தக்கத குற்றவாளிகளை உடனே கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி, அதிகபட்ச தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் தமிழக த.வெ.க அரசு பொது மக்களுக்கான பது காப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காரணம் ஆட்சி பொறுப்பேற்றது முதல் மாநிலம் முழுவதும் அவ் வப்போது ஆங்காங்கே கொலைகள் நடைபெறுவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று கூட திருவாரூர் மாவட்டம் சேங்காளிபுரம் பகுதியில், மது போதையில் 6 பேர் கொண்ட கும்பல் ஒரு வீட்டிற்குள் புகுந்து ஒருவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது கொடுமை. கொலையாளிகள் மகளின் கழுத்தில் அரி வாளை வைத்து மிரட்டி, தந்தையின் கொடூர கொலையை நேரில் பார்க்க வைத்தனர். மேலும் அவரது மனைவி மற்றும் மகனும் இத்தாக்குதலில் காயமடைந்து மருத் துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். இதற்கெல்லம் காரணம் போதைப்பொருட்கள் என்றாலும் காவல்துறை யினரின் மீதும், சட்டம் ஒழுங்கின் மீதும், தண் டனை மீதும் பயம் இல்லாத நிலையை வெளிப்படுத்துகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக புதிதாக ஆட்சி செய்யும் தமிழக அரசின் மீது குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு புயம் இல்லாததும் கூட. எனவே தமிழக அரசு கொலை செய்த குற்ற வாளிகளை உடனே கண் டுபிடித்து, கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி அதிக பட்ச தண்டனைப் பெற்றுத்தர வேண்டும். மேலும் தமிழகம் முழுவதும் போதைப்பொருட்கள் விற்பனை, பதுக்கல், பயன்படுத்துதல் ஆகிய வற்றுக்கு எதிரான நடவ டிக்கைகளை மேற் கொண்டு போதைப் பொருள் புழக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். எனவே தமிழக அரசு மாநிலம் முழு வதும் காவல்துறையினரின் கண்காணிப்பு நடவடிக் கைகளை தொடர்ந்து மேற் கொண்டு, கொலைகள் நடைபெறாமல் இருக்கும் வகையில், மக்களுக்கான பாதுகாப்பில் உறுதியைக் கொடுக்கும் வகையில் ஆட்சி செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன். உயிரிழந்தவரின் குடும் பத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

திருவாரூர்: தமிழ் மாநில காங்கி ரஸ்(மூ) தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில், திருவாரூர் மாவட்டத்தில் மகள் கண் முன்பே தந்தை கொலை செய்யப்பட்டது. மிகவும் கண்டிக்கத்தக்கத குற்றவாளிகளை உடனே கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி, அதிகபட்ச தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் தமிழக த.வெ.க அரசு பொது மக்களுக்கான பது காப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காரணம் ஆட்சி பொறுப்பேற்றது முதல் மாநிலம் முழுவதும் அவ் வப்போது ஆங்காங்கே கொலைகள் நடைபெறுவது மக்களுக்கு […]

Recent News

மேகதாது அணை குறித்து விவாதிக்க திமுக நோட்டீஸ்

மேகதாது அணை குறித்து…

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின்…

ராஜ்மோகன் முதல்வருக்கு பரிசளித்தார்

ராஜ்மோகன் முதல்வருக்கு பரிசளித்தார்

அமைச்சர் ராஜ்மோகன், முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு…

ஒரு நாடே பொய்களால் கட்டமைக்கப்படுகிறது-இயக்குநர் வினோத்

ஒரு நாடே பொய்களால்…

இன்றைய சமூகத்தில் பொய்கள் தவிர்க்க முடியாததாக…

விஜய் ஆய்வு

விஜய் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள்…

அமைச்சர்கள் ஆய்வு கூட்டம் -முதல்வர் தலைமையில்

அமைச்சர்கள் ஆய்வு கூட்டம்…

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள்…

தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்தின் மேலாண்மை இயக்குநர் -அமைச்சருடன் சந்திப்பு

தேசிய கூட்டுறவு வளர்ச்சி…

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை…

1 2 3 4 5 6 31