இன்றைய தமிழகம்

முதல்வர் அறிவித்த 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை:
கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 மது பான சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும் என்ற முதல்வர் விஜய்யின் அறிவிப்புக்கு இணங்க இதுவரை 436 கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள கடைகளை மூட துறையின் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவு றுத்தி இருப்பதா கவும் அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில், “தமிழக முதல்வர் கடந்த 11 அன்று, கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய வற்றின் அருகில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடிட அரசாணை பிறப்பிக்கப்பட்டதன்
அடிப்படையில், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் க.விக்னேஷ் (சனிக்கிழமை) தமிழ்நாடு மாநில வாணிபக் கழக தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இன்று வரை 436 மதுபான சில்லறை விற் பனைக் கடைகளும் அவற் றுடன் இணைந்துள்ள மதுக்கூடங்களும் மூடப் பட்டுள்ளன. மீதமுள்ள மதுபான சில்லறை விற் பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக் கூடங்களை மூடுவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் விக்னேஷ், அதிகாரிகளுக்கு அறி வுறுத்தினார்.
மூடப்பட்ட மது பான சில்லறை விற்ப னைக் கடைகளில் பணிபுரிந்து வந்த கடைப்பணியாளர்களின் நலன் பாதிக்கப்படாத வகையில் அருகிலுள்ள மதுபான சில்லறை விற் பனைக் கடைகளில் பணியமர்த்துமாறு அதி காரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும், அனைத்து சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அத னுடன் இணைந்துள்ள மதுக்கூடங்கள் இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டு மெனவும், அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்கும் கடைப்பணியாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.
விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்கும் டாஸ்மாக் பணி யாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அமைச்சர் விக்னேஷ் அறிவுறுத்தினார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு தகவல் சென்னை:கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 மது பான சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும் என்ற முதல்வர் விஜய்யின் அறிவிப்புக்கு இணங்க இதுவரை 436 கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள கடைகளை மூட துறையின் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவு றுத்தி இருப்பதா கவும் அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில், “தமிழக முதல்வர் கடந்த 11 அன்று, கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய […]

Recent News

TNUSRB தேர்வுகள் ஒத்திவைப்பு:வயது தகுதி பாதிக்கப்படும் தேர்வர்களுக்கு ஓராண்டு வயது தளர்வு வழங்க வேண்டும்-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்

TNUSRB தேர்வுகள் ஒத்திவைப்பு:வயது…

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB)…

மாணவியர் விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தார்-அமைச்சர் செ.கமலி

மாணவியர் விடுதிக் கட்டடங்களை…

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்…

சர்க்கார் படப்பிடிப்பின் போதே தெரியும்-வரலட்சுமி சரத்குமார்

சர்க்கார் படப்பிடிப்பின் போதே…

தளபதி..!! இந்தப் பதிவைப் பற்றி என்ன…

இரண்டாவது அமைச்சரவை கூட்டம்

இரண்டாவது அமைச்சரவை கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில்…

தலைமை அலுவலகத்தில் லயோலா மணி  ஆய்வு

தலைமை அலுவலகத்தில் லயோலா…

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள்…

1 6 7 8 9 10 31