முதல்வர் அறிவித்த 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை:
கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 மது பான சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும் என்ற முதல்வர் விஜய்யின் அறிவிப்புக்கு இணங்க இதுவரை 436 கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள கடைகளை மூட துறையின் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவு றுத்தி இருப்பதா கவும் அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில், “தமிழக முதல்வர் கடந்த 11 அன்று, கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய வற்றின் அருகில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடிட அரசாணை பிறப்பிக்கப்பட்டதன்
அடிப்படையில், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் க.விக்னேஷ் (சனிக்கிழமை) தமிழ்நாடு மாநில வாணிபக் கழக தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இன்று வரை 436 மதுபான சில்லறை விற் பனைக் கடைகளும் அவற் றுடன் இணைந்துள்ள மதுக்கூடங்களும் மூடப் பட்டுள்ளன. மீதமுள்ள மதுபான சில்லறை விற் பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக் கூடங்களை மூடுவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் விக்னேஷ், அதிகாரிகளுக்கு அறி வுறுத்தினார்.
மூடப்பட்ட மது பான சில்லறை விற்ப னைக் கடைகளில் பணிபுரிந்து வந்த கடைப்பணியாளர்களின் நலன் பாதிக்கப்படாத வகையில் அருகிலுள்ள மதுபான சில்லறை விற் பனைக் கடைகளில் பணியமர்த்துமாறு அதி காரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும், அனைத்து சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அத னுடன் இணைந்துள்ள மதுக்கூடங்கள் இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டு மெனவும், அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்கும் கடைப்பணியாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.
விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்கும் டாஸ்மாக் பணி யாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அமைச்சர் விக்னேஷ் அறிவுறுத்தினார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு தகவல் சென்னை:கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 மது பான சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும் என்ற முதல்வர் விஜய்யின் அறிவிப்புக்கு இணங்க இதுவரை 436 கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள கடைகளை மூட துறையின் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவு றுத்தி இருப்பதா கவும் அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில், “தமிழக முதல்வர் கடந்த 11 அன்று, கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய […]

Recent News

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த லாரி உரிமையாளர்கள் நல சங்கம் கோரிக்கை

மணல் குவாரிகளை அரசே…

வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல்…

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப் பாதை திட்டத்துக்கு ரயில்வே ஒப்புதல்

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப்…

ரூ.993 கோடி மதிப்பிலான அரக்கோணம் செங்கல்பட்டு…

ஏலகிரி மலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஏலகிரி மலையில் அரசுப்…

ஜோலார்பேட்டை:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி…

கன்னியாகுமரியில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

கன்னியாகுமரியில் சிறந்த மதிப்பெண்…

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில்…

கடலூர்: ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து நாளை மருந்து கடைகள் மூடல்

கடலூர்: ஆன்லைன் வர்த்தகத்தை…

கடலூர் மாவட்ட மருந்தக நலசங்கம் சார்பில்…

தவெக அமைச்சரவையில் இணையும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யார்?

தவெக அமைச்சரவையில் இணையும்…

சென்னை:தேர்தலுக்கு பின்பு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ்…

1 8 9 10 11