
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் கோவில் தெருவில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியில் 2025-26ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுத் தேர்வில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். பள்ளிக்கு பெருமை – சேர்த்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஸ்ரீ நாராயண குரு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் டாக்டர் முனை வர் கி.ரங்கராஜன் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியின் பள்ளியின் சுவாமிஜிகள் மற்றும் செயலாளர், இணைச் செயலாளர், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.